Friday 24 May 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)













காங்.,க்கு அமித்ஷா போன்ற தலைமையை கொண்டு வர வேண்டிய நேரமிது என காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் காஷ்மீரின் அனந்த்நாக் தொகுதியில் ஓய்வுபெற்ற நீதிபதி ஹஸ்னானி மசூதியை விட 7600 ஓட்டுக்கள் பின்னிலையில் உள்ளார் மெகபூபா முப்தி. இவர் பதிவிட்டுள்ள டுவீட்டில், என் மக்கள் மீது அன்பும், பாசமும் கொண்டுள்ளேன். கோபத்தை வெளிப்படுத்தி என்னை தோற்கடிக்க அவர்களுக்கு அனைத்து உரிமைகளும் உண்டு.வரலாற்று வெற்றி பெற்றதற்காக பிரதமர் மோடிக்கும், பா.ஜ.,வுக்கும் என் வாழ்த்துக்கள். அமித்ஷா போன்ற ஒருவரை காங்., தலைவராக பெற வேண்டிய நேரம் இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 1996 ம் ஆண்டு மெகபூபா அரசியலில் இணைந்த பிறகு அவர் பெறும் 2வது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment