Friday 31 May 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

லட்யன்ஸ் கும்பலின் வீழ்ச்சி ஆரம்பம்.....
"நான் கான் மார்க்கெட் கும்பல் உருவாக்கிய தலைவன் அல்ல" என்று தேர்தல் பரப்புரை கூட்டத்தில் உத்தமத் தலைவன் மோடி முழக்கமிட்டபோது பலருக்கும் குறிப்பாக
தமிழக மக்களுக்கு அதன் அர்த்தம் புரிந்திருக்க வாய்ப்பே இல்லை.
டெல்லியில் பத்திரிக்கைகள், அறிவு ஜீவிகள், முன்னாள் அதிகாரிகள், தொழிலதிபர்களின் பிரதிநிதிகள், உலகமயமாக்கல் காலத்தில் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் வெளிநாட்டு அரசுகளுக்கும் வக்காலத்து வாங்குபவர்கள், இடைத் தரகர்கள் ஆகியோரைக் கொண்ட கும்பல்தான் கான் மார்க்கெட் கும். இதை லட்யன்ஸ் டெல்லி கும்பல் என்றும் அழைப்பர்.
உண்மையும் பொய்யும் கலந்த வதந்திகளைப் பரப்புவதில் நிபுணத்துவம் பெற்றது இந்த கும்பல். மத்திய அரசுக்கும் பிரதமருக்கும் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் ஏன் நீதிபதிகளுக்கும் ஆதரவாகவோ எதிராகவோ கருத்துக்களை உருவாக்க வல்ல செல்வாக்கும்
அறிவுக்கூர்மையும் கொண்ட கும்பல் இது.
டெல்லியில் இருந்துகொண்டு வதந்திகளை உருவாக்கி, அதைச் செய்தியாக மாற்றி, நாடு முழுவதும் பரப்புவதற்கு அதனுடன. இணைந்த பிரபல பத்திரிக்கையாளர்களை அந்த கும்பல் பயன்படுத்துகிறது. இந்தக் கும்பலைச்
சேர்ந்தவர்களை குஷிப்படுத்தாதவர்கள்
யாரும் நிம்மதியாக இருக்க முடியாது.
பிரதமரையும் அமைச்சர்களையும் தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கு இந்தக் கும்பலுக்கு நேரம் ஒதுக்க வேண்டும். இந்தக் கும்பல் சிபாரிசு செய்பவர்களையும் சந்திக்க வேண்டும்.
இந்தக் கும்பலைக. கண்டு அஞ்சாத பிரதமரோ, அரசியல் கட்சியோ, தலைவர்களோ, அதிகாரிகளோ ஏன் நீதிபதிகளோ டெல்லியில் கிடையாது. இந்த லட்யன்ஸ் கும்பலின் வாயிலிருந்து தப்பிக்கவே அனைவரும்
முயற்சிப்பார்கள்.
இப்படி சர்வ அதிகாரங்களும் கொண்ட கும்பலைத்தான், மோதிஜி அப்படியே ஓரம் கட்டினார்.
இந்தக் கும்பலுக்கு இருந்த அத்தனைச் சலுகைகளையும் நீக்கினார் மோடி.
பெரிய பத்திரிக்கையாளர்கள் கொண்ட கூட்டத்தினை அரசாங்கச் செலவில் வெளிநாடுகளுக்குச் செல்வதை
தடுத்தார் மோடி.
இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்களைச் சந்திப்பதை அறவே தவிர்த்துவிட்டார் மோடி.
அதனால் ஆத்திரம் கொண்ட அந்தக் கும்பல்,மோடிக்கு எதிராக நாடு முழுவதும் செய்திகளை பரப்பினார்கள்.
மோடியின் சாதனைகளை மறைத்து, அவரைப் பற்றி அவதூறுகள. கூறி, அங்குமிங்குமாக நடந்த சிறு சிறு நிகழ்வுகளைக. கூட பெரிது படுத்தினார்கள்.
நாட்டின் பன்முகத்தன்மை அழிக்கப்பட்டு,
அதன் சகிப்புத்தன்மை குறைந்து, மக்களின் அடிப்படை உரிமைகள் பறிபோய் நாடே நாடே மாறிவிட்டதாக மோடியின் கடந்த ஐந்தாண்டு காலமும் பிரச்சாரம் செய து வந்தனர்.
வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்களுடன. இணைந்து கொண்டு உலக அளவில். நமது
நாட்டை தலைகுனிய வைத்தனர்.
அந்த லட்யன்ஸ் கும்பலைச் சேர்ந்த
பத்திரிக்கையாளர்கள்தான் "2019ல் மோடி தோற்று விடுவார்" என்ற தோற்றத்தை நாடு முழுவதும் ஏற்படுத்தினர்.எதிர்க்கட்சிகளும் இந்தக் கும்பலை நம்பி பகல்கனவு கண்டனர்.
தோற்றது எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல....
இந்த லட்யன்ஸ் கும்பலும்தான்.
நன்றி : துக்ளக் (05-06-2019)

No comments:

Post a Comment