Friday 24 May 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அபாயகரமான நிலையில் இருக்கிறது தமிழக அரசியல் களம்!
சற்றே பின்னோக்கி செல்கிறோம்!
மோடி ஜெயலலிதா சந்திப்பு- கொச்சைப்படுத்தி பாடலாகவே பாடப்படுகிறது!
பாடியவன் கோவன், அமைப்பு மக்கள் அதிகாரம்!
இங்கிருந்து தொடங்கியது அபாய சங்கு!
அதுவரை நக்சல் நடமாட்டம் தமிழகத்தில் கட்டுப்பாட்டில் இருந்தது!
கோவன் கலைஞர் கருணாநிதியை சந்தித்து வாழ்த்து பெறுகிறான்!
தைரியமாக தமிழகத்தில் தொடங்குகிறது மோடி எதிர்ப்பு மற்றும் நக்சல் ஆதரவு பிரச்சாரம்!
கல்லூரி, பள்ளிகள், பேருந்துகள், பொதுமக்கள் கூடும் இடங்களென நக்சல் ஆதரவு கருத்துகள் மத்திய அரசையும் மோடியையும் கடுமையாக விமர்சித்து பரப்பப்படுகிறது!
ஓரளவுக்கு படித்த இளைஞர்கள் கூட்டத்திற்கு வாட்சாப், ஃபேஸ்புக் வழியாக மீம்ஸ் என்ற வடிவில் அப்பட்டமான பொய் பிரச்சாரம் நடக்கிறது!
தமிழகத்தில் இளைஞர்கள் முதற்கொண்டு இல்லத்தரசிகள் வரை இது போன்ற மீம்ஸ்களை உளமாற நம்புகின்றனர், மோடி ஒரு மோசமான ஆட்சியாளராக உளவியல் பூர்வமாக தமிழக மக்களின் மனதில் பதிய வைக்கப்படுகிறார்!
கூடவே தெளிவாக களம் இறங்கின மதமாற்ற சக்திகள்!
நந்தினி, வளர்மதி, கௌசல்யா. தி.க கூட்டம்னு கருத்துரிமை காவலர்களால் வரிசை கட்டுறாங்க!
கவிதையின் ஊடே மானே தேனே மயிலே குயிலே என்பது போல,
ஜல்லிக்கட்டு, மீத்தேன், நெடுவாசல்னு போராட்டங்களங்கள் கட்டமைக்கப்பட்டன!
நக்சல்கள், பிரிவினைவாத, மதமாற்றுச் சக்திகளுடன் கலைஞர் ஆசிகளோடு கை கோர்த்து ஸ்டாலின் தான் கையெழுத்து போட்டு கொண்டு வந்த திட்டங்களை மோடி கொண்டு வந்ததாக மக்களை நம்ப வைத்தனர்!
மத்திய அரசு மற்றும் மோடி மீதான வெறுப்புணர்வு அபாரமாக கட்டமைக்கப்பட்டது!
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதே ஒரு காவல் அதிகாரி சொன்னார் தோழர் என்று அழைப்பவர்களுடன் உங்கள் பிள்ளைகளை சேர விடாதீர்கள், கண்காணியுங்கள் என்று!
3 வருடங்களாக கனிமொழி அண்ட் கோ தூத்துக்குடியை குறி வைத்து களமிறங்கியது!
ஸ்டெர்லைட் போராட்டம் பூதாகரமாக எழுந்து மத்திய மாநில ஆளுங்கட்சிகளுக்கு எதிரான மனநிலையை மேலும் உறுதியாக்கியது!
ஜெயலலிதா மறைவு, தினகரன் பிரிவு, கட்சியை காப்பாற்றுவதில் கவனம் என மாநில அரசின் சிந்தனைகள் முற்றிலும் முடங்கிப் போயிருந்த காலங்களில் இந்த வெறுப்புணர்வு பிரச்சாங்கள் பிரம்மாண்டமான வெற்றிகளை குவிக்கப் தொடங்கிவிட்டன!
சடாரென்று விழித்துக்கொண்ட காவல்துறை தூத்துக்குடி சூழ்நிலையை உற்று நோக்கி நக்சல்களை மட்டும் தேர்ந்தெடுத்து சுட்டது!
ஆயினும் அதுவும் ஆட்சிக்கு எதிரான மனநிலையையே மக்களிடத்தில் ஏற்படுத்தியது!
இதற்கு மிகவும் பக்கபலமாக விஜய், விஜய் சேதுபதி, சீமான், ஜிவி பிரகாஷ், பிரகாஷ்ராஜ் கௌதமன், பாரதிராஜா, கமல்ஹாசன் என நக்சல் ஆதரவு விலைக்கூலிகள் களமிறங்கி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக மக்களை குழப்பி விட்டனர்!
ஹெச்.ராஜா ஒருவரைத் தவிர மற்ற பாஜகவினரே இதை எதிர்த்து களமாட சிறிதும் அசையவில்லை!
ஹெச். ராஜா கூறிய வார்த்தைகளையே அவருக்கு எதிராக கேலிசெய்யும் வகையில் பரப்பப்பட்டது! புத்திகெட்ட தமிழர் கூட்டம் அதை ஆமோதித்து சிரித்து மகிழ்ந்து ஹெச்
ராஜாவையும் கேலிக்குள்ளாக்கியது!
இந்த பிரமாதமான நீண்ட கால திட்டமிடல் மூலம் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என 37 பேர் அதிகார வளையத்திற்குள் ஆட்டம் போட வந்துள்ளனர்!
ஒரே ஒரு நம்பிக்கை, மத்தியில் தமிழகத்தின் தயவில்லாத பெரும்பான்மை பலம் கொண்ட தேசநலனில் அக்கறை கொண்ட ஆட்சி மீண்டும் பொறுப்பேற்க இருக்கிறது!
ஆயினும் இன்னும் தமிழக அரசியல் களம் அபாய நிலையில் தான் உள்ளது!
தமிழக மக்களே சிந்திப்பீர், தேர்ந்தெடுத்த பலரும் ஊழல்வாதிகள், தயவுசெய்து பொறுப்புணர்ந்து வெறுப்பு பிரச்சாரத்தில் இருந்து விரைவில் மீண்டு தேசிய நீரோட்டத்தில் சங்கமம் ஆகுங்கள்!
எதிர்காலத்தை பாழாக்கி விடாதீர்கள்!
வ.உ.சியும், பாரதியும், திருப்பூர் குமரனும், சுப்பிரமணிய சிவாவும் தேசியம் வளர்த்த மண் இது!
வாழ்க தமிழ், வெல்க தமிழ்!
பாரத அன்னைக்கு வெற்றி!

No comments:

Post a Comment