Saturday 25 May 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

அதிமுகவுக்கு வீழ்ச்சியா? கண்டிப்பாக இல்லை.
சொல்லப்போனால் கட்சியை வலுப்படுத்தி மீண்டும் தமிழகத்தை ஆள மக்கள் கொடுத்துள்ள மற்றுமொரு வாய்ப்பாகவே இதை கருத வேண்டும்.
மத்தியில் காங்கிரஸ் ஆள தமிழக மக்கள் விரும்பியதால் திமுக கூட்டணி அதிகளவு எம்பிக்களை வென்று வருகிறது. ஆனால் ஒட்டு மொத்த இந்தியாவும் தமிழக மக்கள் மனநிலைக்கு எதிரான மனநிலையில் சிறப்பான வெற்றியை பாஜகவுக்கு கொடுத்துள்ளார்கள். நமக்கு எம்பிக்களில் இழப்பென்ற வருத்தத்தை தாண்டி நாட்டை ஆள வலுவான பிரதமரை தேர்ந்தெடுத்துள்ளது மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழக இடைத்தேர்தல்களில் திமுக வருவதை விட அதிமுகவே ஆளட்டும் என்ற மனநிலையிலேயே மக்கள் வாக்களித்துள்ளார்கள். அதை நாம் வரவேற்க வேண்டும்.
கட்சியில் ஆளுமையான தலைமை இல்லாததால் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலையை மாற்ற மக்களும் நமக்கு துணையாக உள்ளார்கள் என்ற நிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
பணத்தை வைத்து தமிழ்நாடு முழுக்க குறுக்கயும் மறுக்கயும் சுத்தி நாங்கதான் அம்மாவின் வாரிசு என்று பீலா விட்ட குரூப்பை பொடனியில் அடித்து விரட்டியுள்ளார்கள் மக்கள்.
விரைவில் அதிமுக தனது அடிப்படை கட்டமைப்பை மறுசீரமைப்பு செய்து இன்னும் மிச்சம் மீதி இருக்கும் கருங்காலிகளை களை எடுத்து வலுவாக எழ இந்த தேர்தல் நமக்கு வழியை ஏற்படுத்தியுள்ளது. இதை புரிந்து நடந்தால் இனியும் நமக்கு ஜெயமே

No comments:

Post a Comment