Monday 29 April 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*⃣வாழ்க்கையை உள்ளவாறு ஏற்றுக் கொள்ள வேண்டும். இன்று முதல் எல்லோருடனும் இனிமையாக பழகுவோம் என்ற முடிவோடு ஒவ்வொரு நாளையும் தொடங்குவோம். குறையில்லாதவர் யார்? தவறு செய்யாதவர்கள் யார்? என்ற எண்ணத்தில் அனுசரித்து சென்றால் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
*⃣குறை காண்பதை தவிர்க்கவும். குற்றம் காண்பின் சுற்றம் இல்லை. அடிக்கடி குறை காண்பவர்களுக்கு, நாளும் பொழுதும் எதிரிகள் அதிகரித்துக் கொண்டே போவார்கள்.
*⃣பொய்யை உரக்கச் சொல்லவும், உண்மையை மெதுவாகச் சொல்லவும், பழகிய உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
*⃣புதிய நண்பர்கள் கிடைத்தவுடன், பழைய நண்பர்களிடம் கடமைக்குத் தான் பேசுவார்கள்.
*⃣காத்திருப்பின் வேதனையை அதிகப் படியாக உணர வைப்பது மருத்துவமனைகளே.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment