Monday 29 April 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

தம்பி...
கடன் வாங்கி குடுத்திருக்குப்பா
மறக்காம போன உடனே எடுத்து
பீஸ் கட்டிரு...
இது அப்பா.
கண்ணு...
மறக்காம போய் சேர்ந்ததும்
ஒரு போன் போட்ரு
எதுத்த வீட்டு வாத்தியார் வீட்டுக்கு...
இது அம்மா.
ஏ ராசா..
வேளா வேளைக்கு வயிறார சாப்டுப்பா
வாரா வாரம் எண்ண தேச்சி குளிப்பா ..
இது பாட்டி.
எப்படியாவது இங்லீசு பேச கத்துக்குப்பா
நம்ம ஜில்லாவுலேயே நீதான் ஒசத்தியா வரணும்
இது தாத்தா.
என்ன மாதிரி நீயும் ஏர் ஒட்டி கஷ்டப் படாதடா
எப்படியாவது படிச்சி உத்தியோகத்துக்கு வந்துட்றா
இது அண்ணன்.
மறக்காம புது பேனா வாங்கிக்க
என் உண்டியல உனக்காக ஓடச்சிருக்கேன்..
இது தங்கச்சி.
மறக்காம போன உடனே
மஞ்ச பையை தொறந்து பாரு
நான் சேத்து வச்ச காச உன் செலவுக்கு வச்சிருக்கேன்....
இது தம்பி.
மறக்காம போன உடனே
உன் பொறந்த நாளைக்கு புது சட்டை வாங்கிகப்பா...
நான் தையல் தச்ச காச
உனக்காக வச்சிருக்கேன்....
இது அக்கா.
அன்று...
இதை எல்லாவற்றையும்
மறக்காமல் செய்துவிட்டோம்...
இன்று....
இதை சொன்ன எல்லோரையும்
மறந்து விட்டோம்.......சதீஷ் பாண்டியன்...sp
நன்றி கோனாபட்டு சுப்பு

No comments:

Post a Comment