Monday 15 April 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், கண்ணதாசனும் ஒருவருக்கொருவர் கடும் போட்டியாளர்களாக பார்க்கப்பட்ட காலத்தில் கூட இருவருக்குமிடையே ஆரோக்கியமான தோழமை நிலவியது.
'பாகப்பிரிவினை படத்தில் தனக்கு தாலாட்டுப்பாடல் எழுதவராது' என்ற பட்டுக்கோட்டை, "அண்ணன் கண்ணதாசன் தான் தாலாட்டை அழகாக எழுதுவார். அவரிடமே கேட்டு வாங்குங்கள்" என்றும் சொன்னார். "ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ..
நான் பிறந்த காரணத்தை
நானே அறியும் முன்பு..."
என்று கவிஞர் எழுதிய பல்லவியை பார்த்துவிட்டு, கண்ணதாசன் மீதிருந்த கோபத்தை, பழைய சச்சரவுகளை மறந்துவிட்டு அவரை கட்டியணைத்து உச்சி முகர்ந்தாராம் சிவாஜி.
இதற்குப் பிறகு தான் சிவாஜி படமென்றால் பாடல்கள் கண்ணதாசன் என்பது எழுதப்படாத விதியானது. இந்த பாலத்தை உருவாக்கிய பட்டுக்கோட்டையாரோ தன் பலத்தை மட்டுமே நம்பி இருந்தார். யார் வாய்ப்பையயும் கெடுத்து தனக்கு வாய்ப்பை உருவாக்கி கொண்டவரல்ல அவர்.
அதனால் தான் அவர் இறந்த போது கலங்கி மனம் துடித்து கண்ணதாசன் இப்படி எழுதினார்.
கல்யாண சுந்தரனே
கண்ணியனே! ஓர் பொழுதும்
பொல்லாத காரியங்கள்
புரியாத பண்பினனே
தன்னுயிரைத் தருவதனால்
தங்கமகன் பிழைப்பானோ?
என்னுயிரைத் தருகின்றேன் எங்கே என் மாகவிஞன்?
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மறைவால் ஏற்பட்ட சூனயத்தை, என்னைக் கொண்டே சினிமா உலகம் நிரப்பிற்று. அதில் எனக்கு ஆவணம் வரவில்லை.
ஆசையே பெருக்கெடுத்தது... என் ஆயுள் காலம்வரை மறக்க முடியாத பெயர் கல்யாணசுந்தரம். என்றவர் கண்ணதாசன்.

No comments:

Post a Comment