Saturday 31 March 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

💮 பணத்தின் மூலம் பெறப்படும் புகழை விட நல்ல குணத்தின் மூலம் பெறப்படும் புகழே சிறந்தது.
💮 எங்கெங்கே நிதானமாக இருக்க வேண்டும் என்பதை வாழ்க்கை நிதானமாகத் தான் கற்றுத் தருகிறது.
💮 பயன் படுத்தப் படாத அறிவு, சுய கட்டுப் பாடு இல்லாத வாழ்க்கை, பொய்யில் வாழும் மனிதன், பேராசைக்காரன் ஆகியோர் நட்பு கேடு விளைவிக்கும்.
💮 எவரிடமும் சொல்லி விட முடியாத உண்மைகளை காலங்களாய் சுமந்து திரிவதை விடவா பெரும் பாரம் இருந்து விடப் போகிறது.
💮 உனக்கு யார் சொன்னது என திருப்பிக் கேட்காமல், அப்படியாமே என அடுத்தவரிடம் கேட்பதே, வதந்திகளின் துவக்கப் புள்ளி. சமூக வலைத் தளம் அடுத்த புள்ளி.
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment