Friday 23 March 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

👽முயற்சி.. முயற்சி.. விடாமுயற்சி👽
தளர்ச்சி இல்லா முயற்சியே ஒரு பயிற்சி.. முயன்றால் முடியாதது இந்த உலகில் இல்லை.
விடாமுயற்சி வெற்றிக்கு வித்திடும். வாழ்வில் சுவை கூட்டுவது இந்த முயற்சி தான்.
வாழ்க்கை வாழ்வதும் ஒரு முயற்சி தான்.
பூமி சுழலுவதும் இந்த முயற்சியில் தான்...
தோல்விகளை வெல்ல முயற்சி என்னும் ஆயுதம் வேண்டும். நம் செயலில் முயற்சி இருந்தால் தோல்விகள் நம்மை அண்டாது.
முயற்சிக்கு எத்தனையோ பேர்கள் சரித்திரத்தில் நிறைய உள்ளார்கள்.
அவரவர் செயலில் முயன்று வென்றதால் தான் அவர்கள் சரித்திரத்தில் இடம் பிடித்தார்கள்.
நம் திட்டமிட்ட முயற்சி நாம் வேண்டியவற்றையும் வேண்டியதிற்கு மேலும் அள்ளித் தரும்.
முயற்சி இல்லாமல் தெரு கற்களாய் நின்று கொண்டு, விழலுக்கு இறைத்த நீராய் வேலை பார்த்துக் கொண்டு, கடைகளில் அழகு மெழுகு பொம்மைகளாய் நின்று கொண்டு, உள்ளத்தை பூட்டி உடல் உழைக்காமல் உட்கார்ந்து உண்டு வாழ்பவர் எல்லாருக்கும் முயற்சி என்ற நான்கு எழுத்து மிகவும் அவசியம் தேவை.
மக்களின் முயற்ச்சியே நாட்டின் வளர்ச்சி!
முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் - பழமொழி.
முயற்சி உடையோர் புகழ்ச்சி அடைவர் - புதுமொழி.
தடை கற்களை படி கற்களாக மாற்றுவதும் இந்த முயற்சியே. வாய்ச் சொல்லாக முயற்சியை உச்சரிப்பதை விடுத்து. நம் செயலில் பிரதிபலிக்க வேண்டும்.
சுயமுயற்சி ஒருவரின் வெற்றிக்கும், கூட்டு முயற்சி அனைவரின் வெற்றிக்கும் வழிகோலும். முயற்சி இல்லாத ஒரு செயல் சிறகில்லாத பறவை உயர பறக்க நினைப்பதற்கு ஒப்பாகும்..
ஆம்., நண்பர்களே...,
''முயற்சி திருவினையாக்கும் என்பது அய்யன் வள்ளுவரின் வாக்கு..
ஆம்,.. வாழ்க்கையில் நாம் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் ஒவ்வொரு பாடத்தை கற்றுக் கொடுக்கிறது.
முயற்சியுடன் நம்மை நமக்குள் தேடி
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment