Wednesday 28 March 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🔮வாழ்க்கையில நாம் முன்னேற தடையாக இருப்பது தாழ்வு மனப் பான்மையும், பிறர் என்ன நினைப்பார்களோ என்ற எண்ணமும் தான்.
🔮இப்பலாம் யார்கிட்டயும் அதிகமா பேசுறதில்ல, பேசவும் பிடிக்கல. இதுவும் நல்லது தான். நெருக்கம் ஆகாம இருக்க வரைக்கும் சங்கடம் சச்சரவுகள் எல்லாம் இல்லாமல் இருக்கலாம் என்பதே இன்றைய உலகம்.
🔮நாம் ஒரு காரியம் செய்திட நினைத்து அது நிறைவேறாமல் போனால் அதற்காக வருத்தமோ கோபமோ கொள்ளக் கூடாது, மாறாக தோல்விக்கு காரணம் என்னவென்று ஆராய்ந்திட வேண்டும்.
🔮வாழ்க்கை என்பது பேசும் படம். சரியான இடத்தில் சாதூர்யமாகவும், சமயோஜிதமாகவும் பேசத் தெரிந்தவர்களே இங்கே மகிழ்ச்சியாக வாழ முடியும்.
🔮கஷ்ட படுறவங்க எப்போதும் கஷ்டத்திலே வாழ மாட்டாங்க. வாழ்க்கை மாறும். தன்னம்பிக்கையை மட்டும் விட்டு விடக் கூடாது.
நல்லதே நடக்கும்
எல்லாம் நன்மைக்கே

No comments:

Post a Comment