Wednesday 28 March 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

⚝பொறுமையாக இருங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்களுக்குள் அடித்துக் கொள்ளாதீர்கள். பண விவகாரங்களில் முழுத் தூய்மையுடன் நடந்து கொள்ளுங்கள். நம்பிக்கையும் உண்மையும் பக்தியும் இருக்கும் வரை எல்லாம் நன்றாக நடக்கும்.
⚝எதிர்பார்த்தில் கிடைத்ததை மறந்து விட்டு. எதிர்பார்த்து கிடைக்காததை மட்டும் நினைத்து வருந்துவது மன அழுத்தம் வரக் காரணம்.
⚝கஷ்டம் என்பது அனைவருக்கும் ஒன்று தான். கஷ்டத்தை சமாளிக்க முயற்சித்தால் முன்னேறலாம். கஷ்டத்தை நினைத்து ஒன்றும் செய்யாமல் வருந்தினால் நாட்கள் வீணாகி விடும்.
⚝கடலளவு மகிழ்ச்சி நம்மை ஒன்றும் செய்வதில்லை. மாறாக துளியளவு கவலை நம்மை மூழ்கடித்து விடுகிறது.
⚝தனிமனிதனால் எதையும் சாதித்து விட முடியாது என்ற எண்ணம் காலங்காலமாக நம்மிடம் உள்ளது, ஆனால் இன்று எல்லா சாதனைகளும் வளர்ச்சிகளும் ஏதோ ஒரு தனி மனிதனின் ஆசையும் போராட்டமும் தான். முயன்றால் முடியும்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment