Wednesday 28 March 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

💎உங்களின் நியாயமான ஆசைகளை கொஞ்சமேனும் நிறைவேற்றிக் கொள்ளுங்கள். இல்லையெனில் வெறும் ஏமாற்றங்கள் மட்டுமே மிச்சம் இருக்கும்.
💎மௌனத்திற்கு இருக்கும் வலிமை, கோவத்திற்கு கிடையாது.
💎நாம ஏமாந்தால், அதற்கு நாம் வைக்கும் பெயர் அனுபவம். மற்றவர்கள் ஏமாந்தால் அதற்கு நாம வைக்கும் பெயர் இளிச்சவாய்த் தனம்.
💎ஒரு நல்ல கருத்தை, வழி முறையை ஒருவர் சொல்லும் போது, அதை அவரால் மட்டுமே செயலாக்க முடியும் என நம்புவது தவறு. சொல்பவரால் செயல் படுத்துவது சிரமம்.
💎மனிதனிடம் மனிதாபிமானம் இல்லை என்றால் மனிதனாக இருப்பதில் அர்த்தமோ அவசியமோ தேவையோ இல்லை என்று அர்த்தம்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment