Tuesday 20 March 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🔄கண்கள் விரும்புவதையே நாம் காண்கிறோம். மனம் விரும்புவதையே நாம் நேசிக்கிறோம். நேசிக்க விரும்புவதையே நாம் சாதிக்கிறோம். நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்.
🔄இறைவனின் திருவுளத்தாலேயே எல்லாம் நடை பெறுகின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனாலும் மனிதன் வேலை செய்தே ஆக வேண்டும். ஏனெனில் மனிதனின் செயல்கள் மூலமே இறைவனின் திருவுளம் வெளிப் படுகிறது.
🔄ஆடைகளும் ஆபரணங்களும் தான் நம்மை மனிதராய் மதிக்க வைக்கிறது உறவுகளின் விஷேசங்களில்.
🔄நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் நமக்குப் பிடித்தவர்களிடம் இருந்து கிடைக்கும் பாராட்டுக்களே போதுமான மன நிறைவைத் தருகிறது.
🔄விரக்தியில் உள்ள போது அடுத்தவரை இகழாமல் இருப்பதும், உற்சாக மிகுதியில் உள்ள போது மற்றவரிடம் வாக்கு கொடுக்காமல் இருப்பதும் சராசரி மனிதனுக்கு சவாலானது தான்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்
நன்றி அரு. சொக்கலிங்கம்

No comments:

Post a Comment