Monday 29 January 2024

தண்ணீரும் வார்த்தையும் ஒன்றுதான்.

 தண்ணீரும் வார்த்தையும் ஒன்றுதான்.

வானத்தைவிட உயர்ந்தது இனிமையான சொல்.
எனவேதான் ஒரு சொல் வெல்லும்
ஒரு சொல் கொல்லும் என்பர்.
தவறான நேரத்தில் உணர்ச்சி வசப்பட்டு, தவறான வார்த்தைகளைப் பேசாமல் இருப்பதே, சரியான நேரத்தில் செய்கின்ற சரியான விஷயம்.
ஆத்திரத்தில் பேசினாலும் ஆயிரம் முறை யோசித்துப் பேசுங்கள். தண்ணீரும், கோபத்தில் வரும் வார்த்தையும் ஒன்றுதான் சிந்திவிட்டால் மீண்டும் எடுக்க முடியாது.
ஒரு நாள் தவறும் வார்த்தை போதும்.
பல ஆண்டு வாழ்ந்த உறவை முறித்துவிடும்.
வார்த்தையிலும் நிதானம் தேவை.
_*பதட்டமில்லாத மனிதன் இந்த உலகிற்கே ஒரு வரம்.
அவனது இருப்பு இந்த உலகிற்கு ஒரு அழகைக் கொடுக்கிறது.
பதட்டம் மிகுந்த மனிதன் ஒரு சாபம்.*_
_*பயந்தவன் கவலையோடு தினம் தினம் போராடுகிறான்.*_ _*துணிந்தவன் நடப்பது நடக்கட்டும் என்று வாழ்க்கையோடு*_
_*போராடுவான்.*_
_*அருவியும், உருதியான மனிதனும்
தன் பாதையைத் தானே உருவாக்கி கொள்கின்றனர்.*_
_*வாழ்க்கை ஒவ்வொரு நாளும் கற்றுத் தருகிறது, எப்படி வாழ வேண்டும் என்று அல்ல. எப்படி வாழகூடாது என்று.*_

No comments:

Post a Comment