கவலை எனும் பேப்பர் வெயிட்.
நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பொறுமையோடு கையாளக் கற்றுக் கொள்ளுங்கள்.
பிரச்சனை என்பது ஊதினால் பறக்கும் காகிதத்தைப் பாேன்றதே
அதன் மேல் கவலை எனும் பேப்பர் வெயிட் வைப்பது நாம் தான்.
வண்ணங்கள் நிறைந்த வாழ்க்கை கூட நமக்கு வேண்டாம்;
வலிகள் இல்லாத வாழ்க்கை கிடைத்தால் அதுவே நமக்குப் போதும்.
இன்பத்திலும் துன்பத்திலும்
வாழ்விலும் தாழ்விலும்,
நாம் நினைவில் வைத்துக் கொள்ள கூடிய ஒரே உண்மை
இதுவும் கடந்து போகும் இந்த நிலையும் மாறும் என்பதே, ஆகையால் முயற்சி செய்யுங்கள் வெற்றி நிச்சயம்.
தோற்றத்தை வைத்து யாரையும் வேண்டாம் என ஒதுக்காதீர்கள். ஒருவேளை, அவருக்குச் சேரவேண்டிய மொத்த அழகையும் கடவுள் அவர் இதயத்தில் வைத்திருக்கலாம்.
இன்றைக்கு கஷ்டபடுகிறார்கள் என்று யாரையும் ஒதுக்கி விடாதீர்கள் நாளைக்கு உங்களுக்கு உதவும் படி நிலை அவர்களுக்கு மாறினாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
காற்றிற்கு தாங்காது பறந்திடும் குடைதான் நனையாது நம்மைக் காக்கிறது. பலம் என்பது அதன் பயனைப் பொறுத்தது.
எதையும் எளிதில் தொலைத்து விடாதீர்கள். மீண்டும்
அது எளிதாகக் கிடைப்பதில்லை.
No comments:
Post a Comment