Saturday 27 January 2024

மாநகர் மதுரையில் கிரடாய் பேர்ப்ரோ 2024 கண்காட்சி தொடங்கியது.

 மாநகர் மதுரையில்

கிரடாய் பேர்ப்ரோ 2024 கண்காட்சி தொடங்கியது.
மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கத்தில் கிரடாய் சார்பில் நடைபெறும் வீடு மற்றும் மனைகள் கண்காட்சிக்கு 26.01.2024 காலை தொடங்கியது.
மாநகராட்சி ஆணையர் மதுபாலன் திறந்து வைத்தார்.
மூத்த உறுப்பினர் விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் எஸ். சீத்தாராமன், தமிழ்நாடு தலைவர் இளங்கோவன் வாழ்த்துரை வழங்கி முன்னிலை வகித்தனர். மதுரை தலைவர் விஜய தயா நிர்வாக இயக்குநர் முத்து விஜயன் வரவேற்பு ஆற்றினார், சேர்மன் மேக்ஸ் பிராப்பர்ட்டி நிர்வாக இயக்குநர் ராமகிருஷ்ணன் நினைவுப் பரிசு வழங்கினார். செயலாளர் எனர்ஜி லிவிங்ஸ்கேப்ஸ் நிர்வாக இயக்குநர் யோகேஷ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
துணைத் தலைவர் விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் சி இ ஒ ஸ்ரீ குமார் நன்றி கூறினார்.
பொருளாளர் ஜெயபாரத் நிர்வாக இயக்குநர் ஜெயக்குமார், துணைச் செயலாளர் அண்ணாமலையார் பில்டர்ஸ் உரிமையாளர் எம். அழகப்பன், ஜெயண்ட் கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் ஜெயச்சந்திரன், நமது கன்ஸ்ட்ரக்ஷன் சக்திவேல் உள்ளிட்ட பலர் ஒருங்கிணைப்பில் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கியது.
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் வாழ்வின் நிம்மதி என்ற தலைப்பில் தொடக்க உரை நிகழ்த்தினார்.
27 உறுப்பினர்கள் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், கட்டுமானப் பொருட்கள் நிறுவனம் என களை கட்டியுள்ளது தமுக்கம் மைதானம்.
இன்று முதல் ஞாயிறு வரை நடைபெறும் இந்த கண்காட்சி ஏராளமான பார்வையாளர்கள் பங்கேற்புடன் உள்ளது.


















































































No comments:

Post a Comment