நேற்று இரவு திருப்பரங்குன்றம் நகரத்தார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருநகர் நகரத்தார் சங்கத்தின் 21 ஆம் ஆண்டு விழாவில் தலைவர் அக்ரி ஆத. பஞ்சநதம் தலைமை தாங்கிட, செயலாளர் சி. முத்துராமன் வரவேற்புரை ஆற்றிட தேவகோட்டை லெ. விஜய் பிரபாகரன் சிறப்புரை ஆற்றினார். கமலா சினிமாஸ் வி. என். சிடி. வள்ளியப்பன், மனிதத்தேனீ ரா. சொக்கலிங்கம் வாழ்த்துரை வழங்கினர். காசி நாட்டுக்கோட்டை நகரச்சத்திர மேலாண்மைக் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் பழ. இராமசாமி கடந்த 14 நாட்கள் நடைபெற்ற மின்னல் வேகப் பணிகளை எடுத்துச் சொல்லி நன்றி தெரிவித்துப் பேசினார்.
அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. புதிய டைரியை தொழிலதிபர் மகிபாலன்பட்டி மா. சாத்தப்பன் வெளியிட்டார். புதிய நிர்வாகிகள் தலைவராக ஏ ஆர். சிவா, செயலாளர் எஸ். ஆதப்பன், பொருளாளர் எல். எஸ். ஆறுமுகம், துணைத் தலைவர் சுப. சேக்கப்பன், துணைச் செயலாளர் எஸ். கண்ணன் பொறுப்பேற்றுக் கொண்டனர். பொருளாளர் வீர. காசி நன்றி கூறினார். கொப்பனாபட்டி மலர்விழி பழனியப்பன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். விழா அரங்கில் முழுவதும் நிரம்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
விரிவான செய்திகள் நாளை வரும்.
விரிவான செய்திகள் நாளை வரும்.
No comments:
Post a Comment