Friday 21 June 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உலகிற்கு இந்தியா வழங்கிய கொடை யோகா... நலமே மலரட்டும்...
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி பிரபாத் தாரா பள்ளி மைதானத்தில் பிரதமர் மோடி மக்களோடு இணைந்து தரையில் அமர்ந்து பல்வேறு யோகாசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.முன்னதாக இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
யோகா மனித வாழ்வில் மிக முக்கிய அங்கமாகும். யோகா உடல் நலம் , ஆரோக்கியத்திற்கு மிக அவசியமானது. யோகாவை அனைவரும் நாள்தோறும் செய்ய வேண்டும். தற்போது இதய நோய் பெருகி வருகிறது. யோகா மூலம் இதய நோய் கூட குணமாகும். யோகா மூலம் மனம், உடல் ஒரு நிலைப்படுகிறது. யோகா நமது கலாசாரத்தின் ஒரு அங்கம் ஆகும்.

No comments:

Post a Comment