Thursday 27 June 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

நல்ல தொடக்கம்...
ஐ.நா., சபையில் முக்கியமான அவையான, பாதுகாப்பு சபை உறுப்பினர் பதவிக்கு இந்தியாவை பாகிஸ்தான் ஆதரித்துள்ளது. இது பல நாடுகளுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சைக்குரிய சர்வதேச அரசியல் விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் முக்கிய அதிகாரம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இயங்கி வருகிறது.இந்த அமைப்பில் வீட்டோ அதிகாரம் படைத்த வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. சுழற்சிமுறை உறுப்பினர் : 15 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பில் ஓராண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தற்காலிக உறுப்பினர்களாக ஐந்து நாடுகளை தேர்வு செய்வது வழக்கம்.
10 தற்காலிக உறுப்பினர்களில் 5 நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறி, புதிய நாடுகள் இணைவது மரபாக இருந்து வருகிறது. புதிதாக இணையும் நாடுகள் அடுத்த இரண்டாண்டுகளுக்கு இந்த பதவியை வகிக்கும்.இந்நிலையில், வரும் 2021 - 22ம் ஆண்டில் ஆசிய-பசிபிக் நாடுகள் சார்பில் இந்த இடத்தை பெறுவதற்கு இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ளது. 55 நாடுகள் ஆதரவு : இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் சுழற்சிமுறை (தற்காலிக) உறுப்பினர் பதவியில் இந்தியா இடம்பிடிக்க பாகிஸ்தான் சீனா உள்ளிட்ட 55 ஆசிய-பசிபிக் நாடுகள் ஆதரவு தர முன்வந்துள்ளன.ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், சீனா, இந்தோனேசியா, ஈரான், ஜப்பான், குவைத், கிர்கிஸ்தான், மலேசியா, மாலத்தீவு, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, சிரியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், வியட்நாம் உள்பட ஆசியா-பசிபிக் பகுதியை சேர்ந்த 55 நாடுகளும் ஒருமனதாக முன்வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் இன்று தெரிவித்துள்ளார்.
பிஜேபி என்றால் அது இஸ்லாமியர்களுக்கு எதிரானக் கட்சி என்ற எண்ணம் அதிகமான இந்திய இஸ்லாமியர்களுக்கு உண்டு.குறிப்பாக தமிழக இஸ்லாமியர்கள் அனைவருக்கும் இந்த எண்ணம் நிச்சயமாக உண்டு..
ஆனால்.?உலக இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததை விட, திரு நரேந்திர மோடி அவர்களின் ஆட்சியில்தான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கம் காட்டுகின்றன.
இத்தனை ஆண்டுகளாக இந்தியாவை எதிரிநாடாக கருதிய பாகிஸ்தானும், சீனாவுமே இந்தியாவை ஆதரிக்க வேண்டிய நிலைக்கு திரு நரேந்திர மோடி அவர்களின் ராஜதந்திரம் வெற்றி பெற்றுள்ளதை உலக நாடுகள் ஆச்சரியத்தில் பார்க்கின்றன.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment