Monday 25 March 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பேரன்புகொண்ட பெரியோர்களோ, தாய்மார்களே.. யார் இந்த கார்த்தி. ப.சிதம்பரத்தின் செல்வ மகன்.
பல்வேறு பண மோசடி வழக்குகளில் சிக்கியுள்ளவர்,
திகார் சிறையிலேயே அடைக்கப்பட்டவர்.. அவர் குடும்பமே ஜாமீனில்தான் உலவிக்கொண்டிருக்கிறது, அப்பேர்பட்டவருக்கா உங்கள் ஓட்டு?
( தலைவரே, அவர் நம்ம கூட்டணி வேட்பாளர்.
சாரிய்யா, மறந்துட்டேன் இப்போ பாரு)
அருமை நண்பர் கார்த்திக்கை பற்றி இப்படியெல்லாம் எதிர்க்கட்சியினர் கேட்கிறார்கள்..வழக்குகள் அவர் மேல் போடப்பட்டதே தவிர அவரே போட்டுக்கொண்ட வழக்குகள் அல்ல.. அவ்வளவுதான்.
கார்த்திமேல் உள்ளதெல்லாம் வெறும் குற்றச்சாட் டுகள்.. திகார் சிறைக்கு விசாரணை கைதியாகத்தான் சென்றாரே தவிர, தண்டனை கைதியாக அல்ல என்பது ஏன் புரியவில்லை
முட்டாள் எதிர்க்கட்சியினரே, எல்லாவற்றிற்கும் மேலாக ப.சிதம்பரம் குடும்பமே ஜாமீனில்தான் இருக்கிறது.. தண்டனை பெற்று பரோலிலா உலாவிக்கொண்டிருக்கிறார்கள்?..
சோடா ப்ளீஸ்..


No comments:

Post a Comment