Tuesday 26 March 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🕉எப்படி இருக்கணும்னு நினைக்கிறோமோ அப்படி இல்லாத போதும், நம் எதிர் பார்ப்புகள் ஏமாற்றம் தரும் போதும் நம் நம்பிக்கை தகர்ந்து விடுகிறது.
🕉சிக்கலான கேள்விகளுக்கு எல்லாம் நாம் சொல்லும் சாதுர்யமான பதில்களால் சமாளிக்க முடியும்.
🕉எவன் செத்தால் என்ன? எவன் பிழைத்தால் எனக்கு என்ன? எல்லோரையும் தூற்றுவது தான் என் வேலை, இவ்வளவே என் உலகம் என்பது இங்கு பலரின் மன நிலை.
🕉தொடக்க நிலையில் ஏற்படும் சிறு தடைகளை வெற்றிகரமாக தாண்டி விட்டால் போதும் மகிழ்ச்சியான வாழ்க்கை உங்களை நோக்கி ஓடி வரும் அதற்கு சில புரிதல்கள் தேவை.
🕉கிடைத்த வாழ்க்கையை வாழத் தெரிந்தால், அந்த வாழ்க்கைக்குப் பெயர் தான் அழகான வாழ்க்கை.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment