Friday 22 March 2019

பானகம் பருகிடுங்கள் தொற்று நோயை விரட்டிடுங்கள்....

பானகம் பருகிடுங்கள் தொற்று நோயை விரட்டிடுங்கள்....
#பானகம்
கோடைகாலத்தில் ஏற்படும் களைப்பை விரட்டும் பானம் - பானகம்!!!!
#பழரசத்தை விடவெயிலுகந்தது பானகம் தான் ... கால்சியம்+இரும்புச்சத்து +விட்டமின்கள் + எனர்ஜி = பானகம்
வெயிலுக்கு பானகம் அருந்தும் போது instant energy கிடைக்கிறது நடைப்பயணம் போகும் போது கழைப்பாக வீடு வந்தடையும்,போது நாம் அருந்தும்
பானகமானது உடலுக்கு தேவையான கால்சியத்தை சுக்கிலிருந்தும்,
இரும்புச்சத்தை அமினோஅமிலங்களை பனைவெல்லத்திலிருந்தும்,
#ஏலக்காயிலிருந்து உணவு குழாயில் ஏற்படும் தொற்றுகளையும் செரிமானத்தை சரி செய்வதும்,
#எலுமிச்சம்பழத்திலுள்ள சிட்ரிக் அமிலம் உடலின் நிலைதன்மையை உருவாக்குவதும் அதை பற்றி தரவுகள் அனைவருக்கும் தெரிந்ததே,
புளியிலிருக்கும் விட்டமின் C யானது பனைவெல்லத்துடன் வினை புரிந்து உடனடி எனர்ஜியாக உடலுக்கு அளிக்கிறது அதுமட்டுமல்ல சுக்கு மிக சிறந்த வினையூக்கி உடலுக்கு என்பதை நாமெல்லாம் அறிந்த செய்தி......
#வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு நமது #மரபை போற்றும் பானகத்தை கொடுக்க முயல்வோம் அதன் மூலம் வெப்பத்தால் உருவாகும் #நோய்_தொற்றுக்களை தவிர்ப்போம்...
பானகத்திற்கான #தேவையானபொருட்கள் :
புளி - சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை
பனைவெல்லம் அல்லது வெல்லம் - 2 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் பொடி - 1/4 டீ ஸ்பூன்
சுக்குப்பொடி - 1/4 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் - 1/4 டீ ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்
1. வெல்லத்தை தட்டி பொடியாக்கிக்கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும்.
2. கரைத்த புளிநீரில் வெல்லத்தை சேர்க்கவும். வெல்லம் முழுவதுமாக கரையும்படி ஸ்பூன் கொண்டு கலக்கிவிடவும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் இறுக்கவும்.
3. இதனுடன் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே அல்லது சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகவும்.
4. மிளகு மற்றும் சுக்கு தொண்டைபிடிப்பை குணமாக்கும் நல்ல மருந்து. சளியையும் குணப்படுத்தும். கோடையில் #வெயிலினால்ஏற்படும் #உடல் உஷ்ணத்தையும், #களைப்பையும்
பானகம் பருகி
ஓட ஓட #விரட்டுங்கள்!!!!!

No comments:

Post a Comment