⚜உங்கள் மனம் உணர்வு பூர்வமாக இன்பத்தை அனுபவிக்க: உதவி தேவைப் படுபவர்களுக்கு உதவி செய்தல் நல்லது. இந்த நிமிசத்தில் வாழுதல். கடந்த கால கவலைகளையும் எதிர் கால பயத்தையும் ஒதுக்கி வைப்பது நல்லது.
⚜மகிழ்ச்சி உங்களுக்குள் தான் இருக்கிறது. இருப்பவற்றுக்கு அக மகிழ்ந்து நன்றி கூறுங்கள். உங்கள் அகம் உணர்வு பூர்வமாக இன்பத்தை அனுபவிக்கும். நீங்கள் எதற்கு நன்றி கூறினீர்களோ அது மேலும் மேலும் அதிகரிக்கும்.
⚜செயல் திறன் எப்போதும் பேரார்வம் மூலம் மட்டுமே வெளிப் படுமே தவிர மன அழுத்தத்தால் அல்ல . எப்போதும் உள்ளத்தின் உணர்ச்சியோடு செயலாற்றுங்கள். விரும்புவதை செயலாற்றுங்கள். செயலாற்றுவதை விரும்புங்கள். மகிழ்ச்சி உங்கள் வசமாகும்.
⚜கிடைக்கவில்லையே என்று ஏங்கி அழுவது ஏக்கம். கிடைக்கவில்லையே என்று ஓங்கி உழைப்பது தன்னம்பிக்கை. முயன்றால் முடியாதது ஒன்றுமே இல்லை என்பது ஊக்கம்.
⚜உலகம் நம்மிடமிருந்து தான் ஆரம்பமாகிறது. உலகத்தின் மையமாக நம்மைப் பொறுத்த வரை நாம் தான் இருக்கிறோம். எனவே எதையும் நம்மிடமிருந்து ஆரம்பிப்பது தான் நல்லது. நாம் மாறினால் உலகமும் மாறி விடும்.
எல்லாம் நன்மைக்கே
வாழ்க வளமுடன்
எல்லாம் நன்மைக்கே
வாழ்க வளமுடன்
No comments:
Post a Comment