Friday 20 April 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஒரு
சீடன், குருவைப் பார்த்துக்
கேட்டான் .
"குருவே..
நான் பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டால் மதக்கோட்பாடுகளை மீறியவன் ஆவேனா..?"
"இல்லையே..
தாராளமாகச் சாப்பிடலாம்"
என்றார் குரு.
உடன், சீடன் கேட்டான்.
"கூடவே, ஈஸ்ட்
சேர்த்துக் கொண்டால் தவறா குரு ?"
"அதிலொன்றும்
தவறில்லை. சாப்பிடலாம்." என்றார் குரு.
மறுபடியும் சீடன் கேட்டான்..
"அவற்றுடன் சிறிது நீர் உட்கொண்டால் என்ன குருவே?"
"ஒரு
குறையும் இல்லை" என்றார் குரு.
அவர் முடிப்பதற்குள் சீடன் கேட்டான்.
"இம்மூன்றையும் சேர்த்துதான் பேரிச்சம்பழ மது தயாரிக்கப்படுகிறது. அதை மட்டும் ஏன், நான் அருந்தக்கூடாது என்கிறீர்கள்" என்றான்.
குரு கேட்டார்..
"கைப்பிடி மண்ணை அள்ளி உன் தலையில் போட்டால் உனக்கு வலிக்குமா?"
"வலிக்காது" குருவே என்றான்.
"அதன் மீது சிறிது நீரை ஊற்றினால். . ?"
குரு கேட்டார்.
"அதுவும் வலிக்காது" என்றான்.
குரு அமைதியாகச் சொன்னார்..
"இரண்டையும் சரியான விகிதத்தில் கலந்து சுட்ட செங்கல்லாக்கி, வேகமாக உன் தலையில் போட்டால் என்ன ஆகும்?"
"என் தலை பிளந்துவிடும்
குருவே" என்றான்.
"உன்
கேள்விக்கான
விடை கிடைத்து விட்டதா"
என்றார் குரு.
நன்றி கனகசபை ராமசாமி
"கிடைத்து விட்டது. மன்னித்து விடுங்கள் குருவே" என்றார் சீடன்.
*நீதி* :
அறிவை நல்ல விஷயங்களுக்காக மட்டும் உபயோகப்படுத்துவோர் , எளிதில் வெற்றி பெறுவர்....

No comments:

Post a Comment