Thursday 19 April 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🛎 மற்றவர்களின் நகைப்புக்கு பயந்து பல முயற்சிகள் திறமைகளை மனத்திற்குள்ளே புதைத்தவர்கள் அதிகம்.
🛎 வாழ்க்கையும் விளையாட்டும் சில நேரம் ஒன்று படும். விளையாட்டில் தோற்பது போல் இருக்கும் போது வெற்றி கூட கிடைத்து விடும். வெற்றி தோல்வி பார்க்காது இறுதி வரை போராடு.
🛎 சமூகத்திற்காக வாழ்க்கை முழுதும் உழைத்து, இறுதி வரை அங்கீகாரம் எதிர் பார்க்காத, உன்னத மனிதர்கள் சிலரே. அவர்களைப் பாராட்டுங்கள்.
🛎 தவறை தவறு என்று தெரிந்தே செய்பவர் தப்பித்து விடுகிறார். தவறை தவறுதலாக செய்பவரே மாட்டிக் கொள்கிறார்.
🛎 எந்தவொரு புத்தகமும் ஒரே பக்கத்தில் அடங்குவதில்லை, மாறாக தொடர்ந்து கொண்டே போகும். அதைப் போலத் தான் வாழ்க்கையும் இன்பமும், துன்பமும் நிறைந்த பக்கங்களாக தொடர்ந்து கொண்டே போகும்.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment