Tuesday 17 April 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

⛒சில பிரச்சனைகள் பெரிதாவதும்.. சில பிரச்சினைகள் சாதாரணம் ஆவதும்.. அதைக் கையாளும் விதத்தில் தான் இருக்கிறது.
⛒இன்பமான வாழ்க்கைக்கு மூன்று விஷயங்கள் தேவை. பழையதை மறத்தல். நிகழ்வதை கவனமாக நடத்துதல். வரப் போவதை நன்கு சிந்தித்தல்.
⛒எங்கும் மனைவியை விட்டுத் தராத கணவன், எதையும் கணவனிடம் மறைக்காத மனைவி, பெற்றவர்களை தோழமையாய் நினைக்கும் பிள்ளைகள் என்ற வாழ்வே வரம்.
⛒உங்களால் மற்றவர்களுக்கு ஆக வேண்டிய காரியங்களை அதிகரித்துக் கொண்டே இருங்கள். இல்லையென்றால் உங்கள் முக்கியத்துவம் குறைந்து விடும்.
⛒முந்தைய தலைமுறை போன்று அடுத்த தலை முறைக்கு சொல்ல, தற்பெருமை கதைகள் கூட இல்லை இன்றைய தலைமுறையினரிடம்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment