Thursday 28 July 2022

சிறிய செயலையும் சிறப்பாகச் செய்ய வேண்டும்.

 சிறிய செயலையும்

சிறப்பாகச் செய்ய வேண்டும்.
நல்ல சிந்தனைகளே இல்லாமல் வாழ்ந்து பயன் ஏதும் இல்லை. மற்றவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் உதவி செய்யும் போது வாழ்க்கை நம் தேவைகளை தானாகவே நிறைவேற்றி விடும். சிடு மூஞ்சித்தனமாக இருப்பவர்களை யாருக்கும் பிடிப்பதில்லை. புன்னகைக்க விலை ஏதுமில்லை தானே? உள்ளத்தில் அன்பு மலரும் போது தான் புன்னகை முகத்தில் மலரும்.
கிடைத்த வாழ்க்கையை அழகாக வாழாமல் வெற்றுப் புலம்பல்களோடே வாழ்வதல்ல வாழ்க்கை.
பழைய நினைவலைகளை யோசிக்கும் போது அதில் உள்ள சோகங்களை மட்டுமே அசை போடாமல் நல்ல நிகழ்வுகளையும் அசை போடுங்கள். இன்முகத்துடன் ரசித்து ருசித்து வாழ்வதே சிறப்பு.
ஒரு நாள் தான் வாழ்க்கை என்று தெரிந்த போதும் மலரும் பூக்கள் போலச் சிரித்துக் கொண்டே வாழலாம். சிறிய செயல்களையும் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்ற ஆர்வமிருந்தாலே போதும் ஆத்மார்த்தமான ஈடுபாடு எந்தச் செயலையும் அழகாக்கும்.

No comments:

Post a Comment