கடமையில் கவனம்.
எப்போதும் கடமைகளைச் செய்யும் ஆயத்த நிலையில் இருப்பவர்கள் எதையும் சாதிப்பார்கள்.
கடமைகளைச் செய்வதற்குரிய விதிமுறைகளை மேற்கொள்ளாதார் கடமைகளைப் பயனுறச்செய்தல் இயலாது.
வழியோடு போதல் உழைப்பைக் குறைக்கிறது. களைப்பைக் குறைக்கிறது. பயத்தை குறைக்கிறது. பயணத்தை எளிதாக்குகிறது.
அதுபோலவே விதிமுறைகளின்படி கடமைகளைச் செய்து வாழ்தலும் பயன்பல கூட்டுவிக்கும்.
இப்போதுள்ள முறையில் இல்லற வாழ்க்கையின் மூலம் பெண் அடிமைப்படுத்தப்படுகிறாள்.
அன்பு வளர்ந்தால்தான் இன்பம் தரும். அன்பால் முற்றுப்பெறுவதையே பலர் வாழ்க்கையில் பார்க்கிறோம்.
கோப்புகள் நினைவுக்குரிய சாதனமே தவிர, பணிகளை நிறைவேற்றக்கூடிய சாதனமல்ல.
வளர்ச்சிப் பெறாத மக்களிடம் நன்றியை-கடப்பாட்டை எதிர்பார்ப்பது தவறு; கிடைக்காது.
விளம்பர வெளிச்சம் தேவையற்றது தவிர வேறென்ன.
தொழிலுக்குத் தகுந்த நபர்களும் கிடைப்பதில்லை: நபர்களுக்குத் தகுந்த வேலை தேடுவதும் தொல்லையே.
No comments:
Post a Comment