உயரத்தில் செல்ல உயரத்தில் உள்ளவர்களை உற்று நோக்குங்கள்.
இன்னும் உயர வேண்டும் என்ற எண்ணம் வரும்.
உயரத்திற்குச் சென்ற பின் தாழ்வில் உள்ளவரை உற்று நோக்குங்கள்.
நாமும் இங்கிருந்து தான் உயர்ந்தோம் என்பதை.
தோல்விகளைத்
தழுவும் போது, ஏமாற்றமென
நினையாமல் மாற்றமென
நினையுங்கள்.
பாதிப்பு இருக்காது
உங்களுக்கும் மனதிற்கும்
இதுவும் கடந்து போகும்.
ஒவ்வொரு நாளும்
வெற்றிப் பயணத்தை
தொடங்கிவிட்டேன் என்று
முதலடி எடுத்து வையுங்கள்
வெற்றி நிச்சயம்.
No comments:
Post a Comment