Tuesday 26 July 2022

விழிப்புணர்வு.

 விழிப்புணர்வு.

இனிப்பு மட்டுமே இருந்தால் வாழ்க்கை திகட்டி விடும் அல்லவா? ஞானி ஒருவனிடம் சீடனாகச் சேர விரும்பினான் ஒருவன். குரு சொன்னது முதல் 6 மாதங்கள் நீ கவனமற்று இருக்கும் போதெல்லாம் உன்னை நான் அடிப்பேன். நீ தடுக்கும் போது அடிக்க மாட்டேன். அதற்குத் தயாரா என்று கேட்க ஒத்துக் கொள்கிறான்.
பகலில் கவனமுடன் இருக்கும் அவனால் இரவில் தூங்கும் போது அடி விழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதற்கான வழிகளை யோசித்தான். முன்பு போலவே துாங்கினான். ஆனால் குரு அறைக்குள் நுழையும் போது அவன் மனம் விழிப்புணர்வை அடைய ஆரம்பித்தது. அவர் வருவதை அவன் உள் மனம் அவனுக்கு உணர்த்தியது.
அவன் அடி வாங்குவதில் இருந்து தப்பித்துக் கொண்டான்..குரு சொன்னார். விழிப்புணர்வு அடைந்து விட்டாய். இனி நீ சீடன் இல்லை. நீயே ஞானி என்றாராம். நமக்கும் கூட இத்தகைய விழிப்புணர்வு நிச்சயமாக தேவை.

No comments:

Post a Comment