அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் சிறப்புப் பட்டிமன்றம்.
சிவகங்கை அரசு சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் இன்று காலை ஜென்ஃபோரியன்ஸ் ' 18 சார்பில் தமிழ் மன்ற விழா திகழ்' 22 கல்லூரிக் கலையரங்கில் அதன் முதல்வர் டாக்டர் சி. ரேவதி பாலன் தலைமையில் நடைபெற்றது. துணை முதல்வர் டாக்டர் என். சர்மிளா, மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் பி வி பாலமுருகன், நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் ஆர். மகேந்திரன், மாணவர் மன்ற ஆலோசகர்கள் டாக்டர் எம். மனோன்மணி, டாக்டர் ஏ ஜி கிருஷ்ணவேணி, டாக்டர் டி சேதுபதி, டாக்டர் பி. சந்திரன், டாக்டர் எஸ். அஞ்சலா முன்னிலை வகித்தனர்.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், முனைவர்
பி. செந்தில்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார்.
அதனைத் தொடர்ந்து கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர் மனிதத்தேனீ
ரா. சொக்கலிங்கம் நடுவராகப் பங்கேற்ற சிறப்புப் பட்டிமன்றம் ஊரடங்கு காலத்தில்
இழந்ததைப் பெற்றோமா
பெற்றதை இழந்தோமா
என்ற தலைப்பில் நூறு நிமிடங்கள் நடைபெற்றது.
கல்லூரி மாணவர்கள் டாமினிக் கிறிஸ்டோபர், ப்ரீத்தி பிரியதர்ஷினி, ஹேமா ஸ்ரீ, நிமல் ராஜ்
மற்றும் மீனா, இந்துஜா, ஜமீன் பானு, ஆண்டோ யோகேஷ் வாதிட்டனர்.
இழந்ததைப் பெற்றோம் என்ற தீர்ப்பு வழங்கினார்.
விழா ஏற்பாடுகளை மாணவச் செல்வங்கள் கெளதம், சூர்யா உள்ளிட்ட நிர்வாகிகள் சிறப்பாகச் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment