Thursday 21 July 2022

வாழ்க்கை சிறப்பாகும்.

 வாழ்க்கை சிறப்பாகும்.

எதைச் சொன்னாலும் மற்றவர்கள் மனம் மகிழும் படி சொல்லுங்கள்.
எதைச் செய்தாலும் எல்லோருக்கும் பயன்படும் படி செய்யுங்கள்.
பிடித்தவர்களின் கோபத்தை புரிந்து கொள்ளாமல் பிரிந்து விடாதீர்கள்.
தன்னை விட யாருக்குமே உங்களை பிடிக்கக் கூடாது என்பதின் பிடிவாதமே அந்த கோபத்தின் வெளிப்பாடு.
உலகத்தில் அன்று பணத்தை கண்டு பிடித்தான் மனிதன்.
இன்று அதே பணத்தை வைத்து மனிதனை கண்டு பிடிக்கிறது உலகம்.
நிதானம் தவறும் போதெல்லாம் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.
வார்த்தைகள் கூர்மையானது,
நம்மை எப்போதும் சிதைக்கக் கூடும்.
இறைவன் எதையாவது ஒன்றை உங்களிடமிருந்து எடுத்துக்கொண்டால்.
அதை விடச் சிறந்த ஒன்றை கொடுத்தே தீருவான் என்பதை காலம் நிச்சயம் உங்களுக்கு காட்டித்தரும்.
உங்கள் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் நீங்கள் கவனிக்க வேண்டியது வெளி உலகத்தை அல்ல, உங்களை.
உங்களை நீங்கள் எந்த அளவிற்கு கவனிக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் செயல்கள் தெளிவாய் இருக்கும்.
உங்கள் எண்ணங்களும் சிந்தனைகளும் செயல்களும் கற்பனைகளும் எந்த அளவிற்கு சிறப்பாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு உங்கள் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
தேவையற்ற சிந்தனைகளை விட்டுவிட்டு நேர்மறையாக சிந்திக்க முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் ஒன்றைச் செய்கிறீர்கள் என்றால் அதை மனிதர்களுக்காக செய்யாமல் இறைவனுக்காக செய்யுங்கள்.
நீங்கள் எதை அடையவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களோ அதைப்பற்றி இடைவிடாமல் கற்பனை செய்யுங்கள்.
அதை அடைய தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். நிச்சயமாக ஒருநாள் அதை அடைவீர்கள்.
இறை அருளால் உங்களுக்கு தேவையான அனைத்தையும் பெற்று சிறப்பான வளமான வாழ்க்கையை வாழ்வதற்கு.

No comments:

Post a Comment