Monday 24 September 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

1.உங்களுக்கு #இழைக்கப்பட்ட #அவமானங்கள் எல்லாவற்றையும் குறித்து வைத்துக்
கொள்ளுங்கள். பழிவாங்கிட அல்ல, தப்பித்தவறி கூட அதே தவறை #இன்னொருவருக்கு_செய்துவிடக்கூடாது.
2.யாரையும் #இளக்காரமாக_பார்க்காதீர்கள். அவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் ஏதாவது ஒன்று இருக்கும்.
3.நமக்கு #பிடிக்காதவாரகவே இருந்தாலும் அவரின் சிறு வெற்றிக்கு மனதார ஒரு வாழ்த்து சொல்லிவிட்டு செல்லுங்கள்.
4.’#என்ன_வாழ்க்கைடா_இது’ என்று நினைப்பதை விட, ‘இந்த வாழ்க்கைக்கு என்னடா குறை’ என்று எண்ணி வாழுங்கள்..
5.மற்றவர்கள் #என்ன_நினைப்பார்கள் என்ற #எண்ணத்தை_ஒழித்துக்கட்டுங்கள்.. அது தாழ்வு மனப்பான்மையை உருவாக்கிவிடும்.
6.நீங்கள் நேசிப்பவர்கள் பிரிந்து சென்றால் #சபிக்காதீர்கள். அவர்கள் நல்லபடியாக வாழ #பிரார்த்தனை செய்யுங்கள். உண்மையான அன்பு என்பது அதுதான்..
7.சிறிய #வாய்ப்புகள் என்றாலும் அவற்றை சிறப்பாகச் செய்து முடியுங்கள்.. பெரிய வாய்ப்புகள் தேடி வரும்..
8.பிறரை தவிர்க்கும் முன் ஒரு நிமிடம் #சிந்தியுங்கள்.. உங்களை பிறர் தவிர்த்தால் தாங்கிக் கொள்ள முடியுமா என்று..
9. எதிரே வருபவரின் தகுதியை பாராமல் சிறு #புன்னகைஉதித்தபடி கடந்து செல்லுங்கள்..
10.உங்களைப் பிடிக்காமல் ஒருவர் விலகிச் செல்கிறார் என்றால் அமைதியாக #ஒதுங்கிவிடுங்கள்
இதை மட்டும் நீங்கள் தொடர்ந்து கடைபிடித்தாலே நீங்கள் மிகப்பெரிய செல்வந்தராகவும் ஆக முடியும் சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்தும் கண்டிப்பாக கிடைக்கும்.

No comments:

Post a Comment