Saturday 22 September 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

⚅விவாதம் என்பது அவசியமான ஒன்று. ஆனால் கண்ணியமான சொற் பிரயோகம் வேண்டும். 'எது' சரி என்பது விவாதம். 'யார்' சரி என்பது வாதம். Let’s debate, not argue. Don’t abuse.
⚅நிகழ் காலத்தின் மகிழ்ச்சியையும்,
எதிர் காலத்தில் பாதுகாப்பையும் உணர்ந்தவரே மகிழ்ச்சியாக வாழத் தெரிந்தவர்கள்.
⚅முடிந்த வரை ரகசியமாகவே இருங்கள். நீங்கள் ரகசியமாக இருக்கும் வரையில் தான் அடுத்தவரால் கவனிக்கப் படுவீர்கள். ரகசியம் வெளிப் பட்ட பின்னர் நீங்கள் அடுத்தவரை கவனிக்க வேண்டியிருக்கும்.
⚅பெரும்பாலோர் மனதை வெளியே அலைய விட்டு அமைதியிழந்து வருந்துகிறார்கள். மனம் அடங்கினாலே அமைதி கிடைக்கும்.
⚅மன அமைதியை இழக்க காரணம் எங்கு சென்றாலும் குற்றம் குறைகளை காண்பது தான். இந்த குணத்தை மாற்றி, நல்ல விஷயங்களை மட்டுமே சிந்திக்கும் உயர்ந்த மனோபாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்
நல்லதே நடக்கும்
எல்லாம் நன்மைக்கே

No comments:

Post a Comment