Tuesday 25 September 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌇ஆசையும் ஏக்கமும் செல்வத்தை சேர்க்காது. உழைப்பே செல்வத்தை தரும்.
🌇ஒரு சிலருக்கு நாம் சொல்லும் கருத்துகள் மிகவும் உபயோகமாக இருக்கும். நாம் சொல்வதின் படி கேட்டு நடந்து கொள்வார்கள். அவர்களுக்காகவேனும் நேர்மையாக நாம் நடந்து கொள்ள வேண்டும்.
🌇ஒருவருக்கொருவர் பிடிக்காமல் போவதற்கு அவரவர் நடத்தையே காரணம்.
🌇நீங்கள் சொன்னது சரியோ, தவறோ என எண்ணிக் குழப்பம் அடைய வேண்டாம். சரி என்பவர்களுக்கு சரியெனவும், தவறு என்பவர்களுக்கு தவறெனவும் நீங்கள் சொன்னது நிலைபெறும்.
🌇உலகம் எத்தனை சிறப்பு மிக்கது என்பதை நல்ல மனிதர்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும்.
நல்லதே நடக்கும்
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment