Saturday 29 September 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

.............................................
"புன்னகை தந்த விடுதலை''..
.............................................
ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் யூதர்கள் கொன்று குவிக்கப்பட்ட காலம்..
யூதரான ஹெலன் கெல்லரும் அவரது குடும்பத்தாரும் தூக்கிலிட வேண்டிய நேரம்..
அதற்கு உத்தரவு தர வேண்டிய அதிகாரி வந்து கையெழுத்து போட்டால் அடுத்த நிமிடம் தூக்குத் தண்டனை என்ற நிலை..
அந்த அதிகாரி வந்து சேர்ந்ததும் அவர் ஹெலன் கெல்லரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்தார்..
அந்த அதிகாரி ஹெலன் கெல்லரை,குடும்பத்தோடு வேறு நாட்டுக்கு தப்பியோடசெய்தார்
காரணம் இதுதான்..அந்த அதிகாரி தினமும் சிறைக் கைதிகளை பார்ப்பதற்கு சிறைச்சாலை வருவார்..
அந்த நேரத்தில் எல்லாம் கெல்லர் அமைதியாக அந்த ஜெயில் அதிகாரியைப் பார்த்து புன்னகை செய்வாராம்.
ஆனால் அந்த அதிகாரி ஒருநாளும் திருப்பி புன்னகை செய்ய மாட்டாராம்..அன்று ஏனோ அந்த அதிகாரியின் மனதில் மாற்றம் ஏற்பட அந்த புன்னகைதான் காரணமானது..
''எய்தவன் இருக்க அம்பை நோவது ஏன்..? என்பதை புரிந்து கொண்ட கெல்லர்,சாவதற்கு தயாராகிவிட்ட நிலையில் ,
வாழ்கின்ற காலத்தை ஏன் சோகமாக்கிட வேண்டும் என்ற தெளிவு ஹெலனிடம் இருந்தது.
இந்த நேர்மறையான எண்ணத்தின் வெளிப்பாடுதான் அவரது புன்னகை.
அந்த புன்னகையின் விலைதான் அவரது விடுதலை..
ஆம்.,நண்பர்களே..,
உங்களின் புன்னகை, மற்றவர்கள் மீது நீங்கள் வைத்து இருக்கும் உறவை மேலும்,வலுப்படுத்த செய்யும் மிகச் சிறந்த ஆயுதம்..
தேவையான இடங்களில், உங்கள் புன்னகையை தவழவிட்டு, வாழ்க்கையில் வெற்றி பெறுங்கள்.🙏🏻💐

No comments:

Post a Comment