Monday 17 September 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இல்லற ஜோதி'யில், (மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் சிவாஜி நடித்த) 'அனார்கலி' நாடகத்தில் திருத்தங்கள் தேவைப்பட்டது. கண்ணதாசன் கல்லக்குடி போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததால் (கருணாநிதியைவிட அதிக நாட்கள் சிறையில் இருந்தவர்) அவர் சம்மதத்துடன் கருணாநிதி அவ்ர்களிடம் திருத்தி வாங்கினார்கள். தன் பெயரை போடவேண்டும் என்று கருணாநிதி வற்புறுத்தவே அவர் பெயரை போட்டார்கள்.
கண்ணதாசன் சிறையில் இருந்து வெளியே வந்த உடன் தனது தென்றல் பத்திரிக்கையில் தன் அனார்கலியை வெளியிட, கருணாநிதி முரசொலியில் தனது அனார்கலியை வெளியிட, கண்ணதாசன்-கருணாநிதி பிரிவுக்கு இது தான் முதல் காரணம். கண்ணதாசன் எழுதிய அனார்கலி தனி புத்தகமாக கிடைக்கிறது. படித்துப் பாருங்கள். 90% கண்ணதாசன் எழுதியது தான் படத்தில் இருப்பது தெரியும்.
Ithayakkani S Vijayan

No comments:

Post a Comment