Tuesday 21 August 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சில சமயம் நாம் நம்பியவர்கள் கை கொடுக்க மறுக்கிறார்கள். நம்பாதவர்கள் தானாக வந்து கை கொடுத்து உதவுகிறார்கள்.
கண் முன்னே நடக்கும் அத்தனையுமே வாழ்வியல் பாடங்கள். அதைக் கவனித்தால் வாழ்க்கை வசந்தமாகும்.
வாழ்க்கையில் மிகச் சிறந்த நாட்கள் அமைய, மிக மோசமான நாட்களோடு நாம் போராடித் தான் ஆக வேண்டும்.
விருப்பங்களை ஒளித்து வைத்துக் கொண்டு வாழும் ஒரு செயற்கை வாழ்க்கை தான் இன்று பலரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.
நேர் கோட்டில் பயணிப்பவருக்கே அதிகப் பலம் இருக்க வேண்டும். ஏனெனில் யாரும் பிடித்து நம்மை வளைத்து விடக் கூடாது என்பதற்க்காக.
எல்லாம் நன்மைக்கே
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment