Monday 20 August 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*மண்ணில் போடப்பட்ட அனைத்து விதைகளும் ஒரே மண்னைத் தின்று*,
*ஒரே தண்ணீரைக் குடித்து வளர்கின்றன*.
*ஆனால் மாமரம் கொடுக்கும் பழத்திற்கும்*,
*வேப்ப மரம் கொடுக்கும் பழத்திற்கும் ருசியில் வேறுபட்டது இருப்பது போல.....!!!*
*நாம் அனைவரும் ஒரே* *மூலத்திலிருந்து வந்தவர்கள் தான்.*
ஒரே நீரைத் தான் அருந்துகிறோம்,
ஒரே காற்றைத் தான் சுவாசிக்கிறோம்.
ஆனால் வழியில் எதை சேகரித்து நம்மில் உள்ளடக்கமாக அமைத்துக் கொள்கிறோமோ
*அதைப் பொறுத்துத் தான் நம்முடைய* *தன்மை வெளிப்படும்....!!!*
நாம் எதை சேர்க்கிறோம் அர்ப்பத்தையா....?
இல்லை அற்புதத்தையா......
*அர்ப்பம் என்னும் ஆறு* *குணங்கள்*
*1. பேராசை*
*2. சினம்*
*3. கடும்பற்று*
*4. முறையற்ற பால்* *கவர்ச்சி*
*5. உயர்வு தாழ்வு மனப்பான்மை*
*6.* *வஞ்சம்*
*அற்புதம் என்னும் ஆறு குணங்கள்*
*1. நிறை மனம்*
*2. பொறுமை*
*3. ஈகை*
*4. கற்பு நெறி*
*5. சம நோக்கு*
*6. மன்னிப்பு*
இவை அனைத்திற்கும் அடித்தளமாக உள்ள அன்பை புரிந்து கொண்டால்
அர்ப்பம் நம்முள் எட்டிப் பார்காது....!!!
அற்புதம் நம்மை விட்டு விலகிப போகாதே........
*"சிந்திப்போம்* *தெளிவடைவோம்"*

No comments:

Post a Comment