Tuesday 21 August 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*''கனிவு மிகுந்த வார்த்தைகளை.''*மட்டுமே பேசுவோம்...
மனதில் அழுக்குகளை வைத்து கொண்டு வெளியே செய்கின்ற ஒப்பனைகள் வெறும் முகப் பூச்சாக குறுகிய காலம் மட்டுமே இருக்கும்.
நம் புன்னகை கூட போலியாக வெளி வேசமாக இருப்பதை சிறிது நேரத்தில் காட்டிக் கொடுத்து விடும்
ஆகையால் மனம் சுத்தமாக வேண்டுமென்றால் ஒவொரு புலனும் சுத்தமாக இருக்க வேண்டும் .
கண்களில் இருக்கும் அசுத்தம், காதுகளில் இருக்கும் அசுத்தம் போலவே, வார்த்தைகளில் இருக்கும்.
அசுத்தங்களை நீங்க வேண்டும்.
அதற்கு முதலில் நாம் நம் எண்ணைகளை சுத்தமாக்க வேண்டும்.
நாம் நல்லவற்றை சிந்திக்கும் போது, நம் கண்கள் நல்ல ஓவியங்களை பார்க்கிறது.
நம் காதுகள் நல்ல வார்த்தைகளை கேட்கிறது.
அப்போது மனம் தானாகவே சுத்தமாகி விடும்.
இதைத்தான் வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார் .
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று "என்று..
இனிய சொற்கள் பரந்து இருக்கும்போது, கடுஞ் சொற்களை கையாள்வது, பழுத்தப் பழங்கள் குவிந்து கிடக்கையில், காய்களைத் தேடிப் பிடித்து உண்டு, அதன் பின் அதன் கசப்பை உணர்வது போல இருக்கிறது என்று அருமையாக சொல்லுகிறார்.
ஆம்..
நண்பர்களே...
நாம் பேசும்போது, அடுத்தவர் மனதைப் புண்படுத்தாத வார்த்தைகளாக இருக்க வேண்டும்.
மற்றவர்களின் கருத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூட நாசுக்காக எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும்.
ஆம். நல்ல பழங்கள் போன்று; நாம் பேசும்போது ''கனிவு மிகுந்த வார்த்தைகளை'' மட்டுமே நாம் பயன்படுத்துவோம்.

No comments:

Post a Comment