Monday 27 August 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌷 _சின்ன வயசுல சரியா படிக்கலைனு கவலைப்படாதீங்க.._
_உங்க குழந்தையோட வீட்டு பாடம் உங்கள திரும்பவும் படிக்க வைக்கும்..!!_
🌷 _சில நேரம் மனம் எதை மறக்க நினைக்கிறதோ......_
_விதி அதையே அதிகம் நினைக்க வைக்கிறது.......!!_
🌷 _பேசாமல் இருந்து விட்டால் அழிந்து போவது மொழிகள் மட்டுமல்ல சில உறவுகளும் கூடத்தான்.._
🌷 _உனக்கு என்ன கொடுக்கவேண்டும் உன்னிடம் எதை பறிக்கவேண்டும் என்பதை_
_இறைவனே முடிவு செய்கிறார்...._
🌷 _வலிகளுக்கும் வலிகள் இருந்திருந்தால்.._
_கண்ணீர்வரும் வரை கத்தி அழுதிருக்கும்.._
_தாங்க முடியாமல்.._
🌷 _செய்த உதவியை சொல்லிக் காட்டாதே,_
_எவரும் செய்ய தயங்கும் உதவியை செய்து காட்டு....!!_
🌷 _சுமந்து செல்லும் அந்த நான்கு பேர் யாரென்று தெரிந்து விட்டால் கைமாறு ஏதாவது செய்து விடலாம்.!!_
🌷 _வாகனம் ஓட்டும் போது, மொபைலில் பேசுவதற்கு இணையான அபாயம் மிக்கது, வாகனம் ஓட்டும் கணவரிடம், மனைவி பேசிக் கொண்டே இருப்பது._
🌷 _படுத்துட்டு இருக்கும் போதே_
_மரணம் வந்தால் பரவாயில்லை,_
_மரணம் வரும் வரை படுத்துட்டு இருக்கிறது_
_கொடுமையிலும் கொடுமை..._
🌷 _லாபத்தினால் மட்டும் ஒருவன் பணக்காரனாவதில்லை, சேமிப்பதால் மட்டுமே._
_ஆக முடியும்....._
🌷 _உழைக்கும்போது எதிர்காலத்தை நோக்கி சென்ற நினைவுகள்._
_ஓய்ந்தபிறகு கடந்தகாலத்தை நோக்கி செல்லும்....._
🌷 _விதையை முழுங்கினால் வயிற்றில் மரம் வளருமென குழந்தைகளிடம் சொன்ன நாம ,_
_அதே விதையை நிலத்தில் புதைக்க சொல்லிக்கொடுக்க மறந்து விட்டோம்!!!!!!!!!!!!!!_
🌷 _நல்ல பெற்றோர், நல்ல துணை , நல்ல நட்பு என்று வாழ்ந்து கொண்டு இருந்தாலும், இவை எல்லாவற்றையும் விட பணம் தான் வாழ்க்கை என்று ஒரு தடவையாவது நினைக்க வைத்து விடுகிறது இந்த வாழ்க்கை._
🌷 _பறவை கூண்டு வாங்கி அடைக்காதீங்க,அதுங்க நல்லாவே கூடு கட்டும்.அந்த காசுல ஒரு மரம் நடுங்க அதுகளுக்கும் சேர்த்து பயன்படும்..!!_
🌷 _நம் கனவுகளைப் பற்றி சிந்திப்பதை நிறுத்தி, நம் குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க துவங்கும் பொழுது முற்றுப் பெறுகிறது நம் இளமை !!!_
🌷 _இதுவும் கடந்து போகும் என்பதை விட.._
_இதுவும் பழகி விடும் என்பதே பொருத்தமாகி விடுகின்றது வாழ்க்கைக்கு..._
🌷 _#பொறந்தா... எத்தனை மணிக்கு பொறந்தான்னு கேப்பானுங்க..!_
_#செத்தா... எத்தனை மணிக்கு பாடிய எடுக்க போறாங்கனு கேப்பானுங்க.!_
_"எல்லாமே #டைமிங் தான்"_
🌷 _சொந்த "கால்ல" நிக்கும் போதுதான்.._
_புது "செருப்பு" வாங்க கூட யோசிப்போம்..!!_
🌷 _ஒரே வயிறு னு ரொம்ப செல்லம் கொடுத்து வளர்க்காதீங்க ..._
_அப்புறம் தொப்பைனு பேர் வாங்கிட்டு வந்து நிக்கும் ..._
.
🌷 _எந்த உறவிலும் பிரிவின் வலி தீருவதற்குள் பேசி விடுங்கள்!!_
_வலி பழகிடுச்சுன்னா உறவு முறிஞ்சுடும்!!!_
🌷 _சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்,_
_அன்புக்காக ஏங்குபவர்கள்._
🌷 _இரக்கமும்_ _உறக்கமும் ஒன்று தான்._
_இரண்டையுமே அளவோடு தான் பயன்படுத்த வேண்டும்._
_அதிகம் உறங்குபவன் சோம்பேறி ஆகிறான்._
_அதிகம் இரக்கம் காட்டுகிறவன் ஏமாளி ஆகிறான்._
🌷 _ஆங்கிலத்தில் பேசவில்லை என்றால் படிக்கவில்லை என்று எண்ணும் விசித்திரமான சமூகம்_ 😕

No comments:

Post a Comment