Saturday 18 August 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*"எதிர்க்கட்சித் தலைவரான வாஜ்பாயை... நேரடியாக விமான நிலையத்துக்கு சென்று வரவேற்ற இந்திய ஜனாதிபதி"....*
அரசியல் வேறுபாடுகளை கடந்து...
காங்கிரஸ் ஆட்சிக்கு பேருதவியாக செயல்பட்ட பண்பாளர்...
இந்திய பிரதமராக நரசிம்மராவ் செயல்பட்டபோது... எதிர்கட்சி தலைவராக வாஜ்பாய் செயல்பட்டார்...
அக்காலகட்டத்தில்... வல்லரசு நாடுகளில் ரஷ்யா மட்டுமே இந்தியாவிற்கு நட்பு நாடாக செயல்பட்டது...
*அப்போது... "காஷ்மீரில் தனிவாக்கெடுப்பு நடத்தவேண்டுமென்ற மசோதாவை" ஐநாவில் வல்லரசுநாடான அமெரிக்கா பாக்கிஸ்தானின் தூண்டுதலால் தாக்கல் செய்தது..!*
அந்த மசோதாவின் மீதான விவாதத்தில் இந்திய பிரதிநிதிகள் பேசினர்..! ஆனால்... இந்திய பிரதிநிதிகளின் வாதங்கள் சரியாக அமையாத காரணத்தால்...
அந்த மசோதா வெற்றிபெற்று விடும்- என்பதையும், அடுத்த இருநாட்கள் ஐநா-விற்கு விடுமுறையாக இருப்பதால் அதற்குள்ளாக வலிமையான கருத்துக்களையுடைய இந்தியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும் - என்னும் தகவல் ... இந்திய ஜனாதிபதிக்கு தெரிவிக்கப் பட்டது...!
இது தொடர்பாக இந்திய ஜனாதிபதி சங்கர்தயாள் சர்மாவும், பிரதமர் நரசிம்மராவும் ஆலோசித்தனர்..!
*ஐநா விவாதத்தில் பங்கேற்பதற்கு எதிர்கட்சித் தலைவரான வாஜ்பாயே சிறந்தவர் - என்னும் நரசிம்மராவின் முடிவை ஏற்று...*
குலுமணாலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வாஜ்பாயை...தனி விமானத்தில் ஐநா கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார்கள்...!
வல்லரசு நாடுகளில்.. அமெரிக்கா மற்றும் சீனா மசோதாவிற்கு ஆதரவு... ரஷ்யா மட்டுமே மசோதாவிற்கு எதிர்ப்பு... பிரான்சும் பிரிட்டனும் முடிவெடுக்காத நிலை...
-இந்த நிலையில் ஐநா விவாதத்தில் பங்கேற்க வருகின்ற வாஜ்பாயின் வருகையை அமெரிக்க பத்திரிகைகள் முக்கியத்துவமாகக் கருதிய பல பத்திரிகை செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின...
அமெரிக்காவில் வந்திறங்கிய வாஜ்பாயிடம்... அமெரிக்க பத்திரிகைகள் பேட்டி எடுக்க போட்டியிட்டன...
வாஜ்பாயி - "எனது நாட்டிலுள்ள தீவிரவாதத்துக்கு எதிராக எங்கள் அரசு நடவடிக்கை எடுப்பதை வல்லரசு நாடுகள் எதிர்ப்பது தவறு... அமெரிக்காவால் கொண்டுவரப் பட்டிருக்கின்ற மசோதாவை வல்லரசு நாடுகள் ஆதரித்து... *இந்தியாவிலிருந்து காஷ்மீர் பிரிவதற்கு காரணமாக இருக்கும் நாடுகளிலுள்ள தீவிரவாதிகளுக்கு இந்தியா ஆதரவளிக்கும்"..- என்று தெளிவாகக் குறிப்பிட்டார்...*
பத்திரிகைகள் - "எதிர்கட்சித் தலைவரான உங்கள் முடிவை இந்திய அரசு ஏற்குமா"..? -என்று வாஜ்பாயிடம் கேள்வி எழுப்பினர்...
வாஜ்பாயி - "நான் எதிர்கட்சித் தலைவராக இங்குவரவில்லை... இந்தியாவின் தலைமைப் பிரதிநிதியாக வந்துள்ளேன்... ஏற்கனவே இங்கு வந்துள்ள இந்திய அமைச்சர்கள் எனக்கு கட்டுப் பட்டவர்கள்... எனது முடிவே இந்தியாவின் முடிவு" - என்று கூறினார்...
வாஜ்பாயின் பத்திரிகை பேட்டி வெளியான சில மணி நேரங்களில்... பிரான்சும், பிரிட்டனும் இந்தியாவிற்கு ஆதரவாக நேசக்கரம் நீட்டின... காரணம்.... அவ்விரு நாடுகளிலும் அப்போது தீவிரவாதம் தலைதூக்கியிருந்தது....
அடுத்த நாள்.... இந்தியாவிற்கு எதிராக தான் கொண்டுவந்த மசோதா தோல்வியடைந்து விடுமென்றதை உணர்ந்த அமெரிக்கா... அந்த மசோதாவை வாபஸ் வாங்கியது...
மாபெரும் வெற்றியாளராக இந்தியா திரும்பிய வாஜ்பாயை.... வழக்கத்திற்கு மாறாக... விமான நியைத்திற்கு சென்று இந்திய சனாதிபதி வரவேற்றார்....
இந்த வரலாற்று நாயகனுக்கு... கண்ணீர் அஞ்சலி...

No comments:

Post a Comment