Thursday 23 August 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

குறை என்பது உடலில் இருக்கலாம். உள்ளத்தில் இருத்தல் கூடாது.
💮உங்கள் மீதான அக்கறையில் கேட்கப் படும் கேள்விக்கும், உங்களை மட்டம் தட்டும் கேள்விக்கும் உள்ள வித்தியாசம் தெரிந்திருப்பது மிக முக்கியம். முயலுங்கள்.
💮உங்களை புரிந்தாக வேண்டுமென எந்த உறவிலும் யாருக்கும் எந்த கட்டாயமும் இல்லை, புரிதல் என்பது உங்களுக்கு மற்றவரால் அளிக்கப் படும் ஒரு கூடுதல் சௌகர்யம்.
💮பிழையை மறைக்க ஆயிரம் காரணம் சொல்வார்கள். ஆனால் சரியானதை சொல்லத் தயங்கி நிற்பார்கள். இது தான் வாழ்க்கை.
💮நாம நெனச்ச விஷயம் நடக்கலனா. அது சரியான விஷயம் இல்ல, உருப்படியா வேற ஏதாச்சும் பண்ணணும்னு அர்த்தம். சோ.. மனம் தளராம அடுத்ததை நோக்கி நகருங்க..
எல்லாம் நன்மைக்கே
வாழ்க்கை வாழ்வதற்கே

No comments:

Post a Comment