Monday 27 August 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🌓அதிகம் விட்டுக் கொடுத்துப் போறவங்ககிட்ட உங்க திமிரை காமிக்காதிங்க, முடிஞ்சா அவங்க ஏன் உங்களுக்காக விட்டுக் கொடுத்துப் போறாங்கன்னு யோசிங்க.
🌓சாதிக்க விருப்பமெனில் எதையுமே "தெரியாது" என பின் வாங்காமல் தெரிந்து கொள்ள தயங்காதே. "முடியாது"என முடங்கிடாமல் முயற்சிக்கத் தவறாதே.
🌓மனிதர்களின் திறமைக்கும் இயல்புக்கும் மீறிய செயலை செய்ய நிர்பந்திக்கப் படும் போது, கடுமையான மன அழுத்தத்தை எதிர் கொள்கிறார்கள்.
🌓தவறு ஒன்றும் செய்யாமலே அடுத்தவரின் சாபத்தை பெற்று கொள்வது எல்லாம் அவர்கள் நம்மை வாழ்த்துவதற்கு சமம்.
🌓யாரிடமும் அதிகம் பேசாமல் இருக்கும் தனிமை விரும்பிகள் பலரும் அன்பையும் உணர்வுகளையும் வெளிப் படுத்த தெரியாதவர்களே தவிர அவை இல்லாதவர்கள் அல்ல.
வாழ்க வளமுடன்
நல்லதே நடக்கும்

No comments:

Post a Comment