Saturday 25 August 2018

கிருபானந்த வாரியார் பிறந்த நாள் வாழிய புகழ்

இன்று நமது சம காலத்தில் வாழ்ந்து
விண்ணிலே பறந்தபடி விண்ணுலகம்
சென்ற அறுபத்தி நான்காவது நாயன்மாரான
திரு முருக கிருபானந்த வாரியார்
சுவாமிகளின் பிறந்த தினம்.
"இறைவனின் கருணையை பெற
ஒரு வழியுண்டு.துன்புற்று துடிக்கின்ற
உயிர்களிடம் கருணை செய்யுங்கள் .
அவற்றின் துன்பத்தை நீக்குங்கள்.பிற
உயிர்களிடம் கருணை காட்டினால் கடவுள் உன்னிடம் கருணையுடன் நடந்து
கொள்வதால் அவரது கருணையை நாம் எப்பொழுதும் பெறமுடியும்.இதை ஒரு போதும் மறவாதே".
"கங்கை நீர் சிறந்தது ,அதனினும
சிறந்தது அபிஷேகநீர் ,ஏழைகளுக்காக
உழைக்கும் ஓர் உத்தமனின் முகத்தில்
துளிர்க்கும் வியர்வை நீர் அதனினும்
சிறந்தது." - வாரியார்

No comments:

Post a Comment