Wednesday 22 August 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

உறவுகளைப் போற்றுவோம்....
என்னென்னமோ நடக்கு நாட்டில...
ஸ்கூல்ல முதியோர் இல்லத்துக்கு டூர் கூட்டிக்கிட்டு போயிருக்காங்க.. அங்கே போனா, சொந்த பாட்டி இருக்கிறதை பார்த்து பேத்தி அலறிப்போயிருக்கு..
வீட்ல பாட்டிய பத்தி கேட்டப்போவெல்லாம், அவுங்க தூரத்து சொந்தக்காரங்கள பாக்கப்போயிருக்காங்கன்னு சொல்லிசொல்லியே பேரண்ட்ஸ் அளந்துவிட்டிருக்கிறாங்க, முதியோர் இல்லத்துல சேர்த்துவிட்டதை மறைச்சி..
இப்படியொரு படம், தகவலோட அனிதா சவுகான்ற்ல ஒரு பெண்ணியவாதி டுவிட்டர்ல போடறாங்க.. ஒடனே நம்ம ஹர்பஜன் சிங் போன்ற கிரிக்கெட் பிரபலங்கள் உள் ரீடிவிட் பண்ண இப்போ வைரல் ஆகிட்டிருக்கு..
எந்த ஊரு, ஆளுங்க பேரு என்னன்னு விவரமே இல்லாம ஒரு போட்டோவை வெச்சி விவாதம் போய்க்கிட்டிருக்கு..
ஒருத்தன் மட்டும் வந்து, அடேய் இது 2005-ல நடந்த சமாச்சாரம், நானே அந்த டூர்ல இருந்தேன்டான்னு சொல்றான்.. பட்..அந்த புள்ளையாண்டானும் டீடெயில்ஸ் குடுக்கமாட்டேன்றான்..
மேற்கொண்டு சொல்றதுக்கு எதுவுமில்லைன்னு முடிக்க விரும்பல..நாம அடிக்கடி வேண்டிக்கிறது தான்..
''நல்லா நடமாடிக்கிட்டு இருக்கும்போதே யாருக்கும் பாரம் இல்லாம பொட்டுன்ன்னு போயிடணும்..''
நன்றி எழுமலை வெங்கடேசன்

No comments:

Post a Comment