Saturday 30 June 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

























திராவிடர் கழக ஆபீசுக்குள் ஒருவன் வேகமாய் ஓடி வருகிறான்..
"அண்ணே... அண்ணே..! செம நியுஸ்..! யாரோ ஒரு பொண்ணு ஒரு சாமியார்ட்ட போயிருக்காங்க.. அந்த சாமியார் அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செஞ்சதோட இன்னும் நாலு சாமியாரும் அந்தப் பெண்ணை நாசம் பண்ணியிருக்காங்க..!"
தலைவர் : "சூப்பர் நியூஸ்டா..! கலக்கிட்லாம்..! கமான், கமான்...! எல்லாரும் பெரிய போராட்டத்துக்கு ரெடியாவுங்க..! வைரமுத்துக்கு ஃபோன் போட்டு கவிதை எழுத சொல்லிடு... சைமன்கிட்ட சொல்லி அவங்க பசங்களையெல்லாம் போராட்டத்துக்கு வர சொல்லிடு..! திருமாக்கு ஸ்பெஷலா சொல்லிடு..! கனிமொழிக்கு இன்ஃபார்ம் பண்ணி அறிக்கை அமிச்சி அதை சொல்ல சொல்லிடு..! நம்ம கம்யூனிஸ்ட் தோழர்களுக்கு சொல்லிடு.. செக்குலர் போராட்டம்னு சொல்லுங்க வந்துருவாங்க.. ! எங்கெங்கல்லாம் போராட்டம்னு லிஸ்ட் போடு.. ! பாரதிராஜா, சத்யராஜ், கவுதமன், மத்த போராளிங்களை கறுப்பு சட்டை போட்டுட்டு வர சொல்லிடு..! முஸ்லீம்லீக் ஆளுங்க இங்கதான் உக்காந்துகிட்டு இருப்பாங்க, சொல்லிட்லாம்.. அப்புறம் பேராயர் சற்குணம் கிட்ட சொல்லிடு......"
"பேராயரா..? வேணாம்ணே.. அவுரு வரமாட்டார்ணே..!"
"என்னாடா சொல்ற..? ஒழுங்கா சொல்டா..!"
"நடந்தது ஒரு சர்ச்லேண்ணே... செஞ்சது ஒரு பாதிரியார்....!"
"டேய் மூதேவி..! சாமியார்னு சொன்னே..? இப்போ பாதிரியார்னு சொல்றே..?"
"கோயில்ல சாமியார் மாதிரிதானே சர்ச்ல பாதிரியார்..? ரெண்டும் ஒண்ணுதானேண்ணே..? அதான் சாமியார்னு சொல்லிட்டேன்...."
"அடேய் கூமுட்ட... ரெண்டும் ஒண்ணாடா..? ரெண்டும் ஒண்ணா..? நீயெல்லாம் தமிழ்நாட்ல இத்தன வருஷமா செக்குலர் நாத்திகவாதியா இருக்கே.. இது கூடத் தெரியாதாடா முண்டம்..? நம்ம பொழப்புல மண்ணள்ளி போடப் பாத்தியேடா..? போ.. போய் இதப்பத்தி வாயே தொறக்காம கமுக்கமா உள்ள போய் போத்திகிட்டு படு..! எல்லாம் கேன்ஸல்..!"

No comments:

Post a Comment