Saturday 23 June 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

🛐இருப்பதை விட்டு விட்டு, பறப்பதற்கு ஆசைப் படுபவர்கள், இருக்கும் நிம்மதியை இழந்து விடுகின்றனர்.
🛐பிரச்சினைகளைச் சந்திக்க மூன்று வழிகள்: 1. பிரச்சினையில் இருந்து தப்பி ஓடு. 2. பிரச்சினையை மாற்றப் பார். 3. பிரச்சினையை ஏற்றுக் கொள். வருத்தப்படுவதோ, கோபப்படுவதோ நிச்சயமாக உதவாது. மூன்றில் ஏதாவது ஒன்றைச் செயல் படுத்திப் பாருங்கள்.
🛐பிறர் பொறாமைப் படும் அளவிற்கு வாழ அவசியம் இல்லை. பிறர் சபிக்காத அளவிற்கு வாழ்ந்தால் போதும்.
🛐காரணமில்லாமல் வாழ்க்கையில் எதுவும் நடப்பதில்லை. காரணமே சொல்லிக் கொண்டு இருந்தால் வாழ்க்கையில் எதுவுமே நடக்கப் போவதில்லை.
🛐மகிழ்ச்சி என்பது மனதின் நிலை. கவலை என்பது கையறு நிலை. துக்கம் என்பது தோற்றவன் நிலை. எது நடந்தாலும் சஞ்சலமின்றி உறுதியோடு இருப்பது ஞானியின் நிலை.
வாழ்க்கை வாழ்வதற்கே
எல்லாம் நன்மைக்கே

No comments:

Post a Comment