Tuesday 27 December 2022

நம்பிக்கை விதைகள்.

 நம்பிக்கை விதைகள்.

நம் மனதை உறுதியோடு வைத்துக் கொள்வதற்கான சில வழிகள். இவைகள் நம் வாழ்வை வளமாக்கி வெற்றிப்படியில் நிற்க வைக்கும்.
நாளை நமக்காக
காத்து இருக்கிறது
சோர்வை அகற்றி
நம்பிக்கை வளர்ப்போம்
1. செயல்களை முறையாகத் திட்டமிட வேண்டும்
2. இப்பொழுதே செயலில் ஈடுபட வேண்டும்
3. ஆழமாக சுவாசியுங்கள,
இதனால் உடலும் மனமும் தளர்வு அடைவதை உணரலாம்.
4. நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும், எல்லாம் நன்மைக்கே என்று அடிக்கடி சொல்லிக்கொள்ளுங்கள்
5. முடியாத விஷயங்களை மறுத்துச் சொல்லுங்கள்
6. இசை கேளுங்கள் (அ) பாடுங்கள் எத்தகைய பதட்டத்தையும் தணித்து அமைதிப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு
7. கடவுளை நம்புங்கள்
8. வெளித்தோற்றத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்ய வேண்டாம். பழகிப் பார்த்து முடிவு செய்யவும்
9. குறைவாக பேசுங்கள் அதன் மூலம் நிறைய கற்றுக் கொள்ளுங்கள்
10. பிறர் நேரத்தை நீங்கள் வீணாக்காதீர்கள். அதேபோல் உங்களுடைய நேரத்தை பிறர் வீணாக்க ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்
11. உங்களுக்கு ஒன்றைப் பற்றி தெரியாவிட்டால், உண்மையை சொல்லிவிடுங்கள் தெரியும் என்று நடிக்காதீர்கள்
12. வெற்றி பெற்றால் எல்லோருடனும் சேர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
மண்ணில் பிறப்பது ஒரு முறை
வாழ்வது ஒரு முறை
சாதிப்போம் பல முறை
வாழ்த்தட்டும் தலைமுறை.

No comments:

Post a Comment