வாழ்த்தும் பண்பு.
யாரையும் தெரியாமல் கூட சபிக்காதீர்கள், மனதார வாழ்த்துங்கள்.
மற்றவர்களை மனதார வாழ்த்தும் போதெல்லாம், இறைவனும் உங்களை ஆசிர்வதிக்கின்றார்.
வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுகிற எவரும் செய்ய வேண்டிய முதல் காரியம் வெற்றி பெற்றவர்களைப் பார்த்து பிரமித்து நின்று விடக்கூடாது. தோல்வியில் துவண்டு விழவும் கூடாது.
நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும், எல்லாம் நன்மைக்கே என்று அடிக்கடி சொல்லிக் கொள்ளுங்கள்.
வெற்றி பெற்றால் எல்லோருடனும் சேர்ந்து பகிர்ந்து கொள்ளுங்கள்.
இவைகள் நம் வாழ்வை வளமாக்கி வெற்றிப் படியில் நிற்க வைக்கும்.
No comments:
Post a Comment